இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா?

கேள்வி:

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபிகளைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

– முஹம்மது ஃபஹ்மி, இலங்கை.

பதில்:

இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை நினைவுகூர்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நபித்தோழருக்கும் இத்தகைய நினைவுத்தூண்களை எழுப்பவில்லை.

கீழ்க்கண்ட நபிகளாரின் எச்சரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

صحيح البخاري

435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816.

سنن أبي داود

2042 – حدَّثنا أحمدُ بنُ صالح، قرأتُ على عبدِ الله بنِ نافع، قال: أخبرني ابنُ أبي ذئبٍ، عن سعيدٍ المقبري  عن أبي هُريرة، قال: قال رسولُ الله – صلَّى الله عليه وسلم -: "لا تجعلوا بيوتَكُم قُبوراً، ولا تجعلُوا قَبْرِي عِيداً؛ وصلُّوا عليَّ فإن صلاتكُم تُبْلُغُنِي حَيْثُ كُنْتُمْ"

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவூத்

صحيح البخاري

427 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427, 434, 1341, 3873

صحيح مسلم

2289 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنِ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِى الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்

தர்கா வழிபாட்டின் ஆரம்பமே இறந்தவர்களது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைத்தானின் தூண்டுதல் தான்.

இத்தகைய செயல்பாடுகளில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.