18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸாநபி

ழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன.


மூஸா நபிக்கு வேதம் வழங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தார்கள். தமது சமுதாயத்திற்குப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடினார்கள். இதன் பிறகே அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது. வேதம் இல்லாமல் வேறு வகை இறைச் செய்தி மூலம் தான் அவர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.


நபிமார்களுக்கு வேதம் அருளப்படுவதுடன் வேதம் அல்லாத வேறு செய்திகளும் வேறு வழியில் வழங்கப்பட்டன என்பதற்கும், வேதம் மட்டுமே இறைச் செய்தி என்று சிலர் கருதுவது தவறு என்பதற்கும் இது சான்றாகும்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 3639, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430ஆகிய குறிப்புகளையும் காண்க!

Leave a Reply