309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

309. மஹராக எட்டு ஆண்டு உழைப்பு

வ்வசனம் (28:27) திருமண வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கின்ற உரிமையைக் கூறுகிறது.

ஒரு பெண்ணை மணமுடித்துத் தருவதற்காக எட்டு ஆண்டுகள் தம்மிடத்தில் கூலி வேலை செய்ய வேண்டும் என்று ஒரு பெரியவர் நிபந்தனை விதிக்க அதை மூஸா நபியவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மஹர் கொடுக்காமல் பெண்களை ஏமாற்றுவதும், அற்பமான பொருட்களைக் கொடுத்து அவர்களை வஞ்சிப்பதும் இஸ்லாம் காட்டும் வழிமுறை அல்ல என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

பெண்களிடம் வரதட்சணை கேட்கலாகாது என்பதையும், மஹர் கொடுத்தே மணம் செய்ய வேண்டும் என்பதையும் அறிய 108வது குறிப்பைக் காண்க!

Leave a Reply