அத்தியாயம் : 100 அல் ஆதியாத்

அத்தியாயம் : 100

அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள்

மொத்த வசனங்கள் : 11

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2, 3, 4, 5. மூச்சிரைத்து வேகமாக ஓடுபவைகளின் (குதிரைகளின்) மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக! 379

6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.

8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.

9, 10, 11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும்போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும்போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிய வேண்டாமா?26

இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.

 

Leave a Reply