மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்
மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். திருக்குர்ஆன் 17:1 ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் […]
ஹுதைஃபியா உடன்படிக்கை
ஹுதைஃபியா உடன்படிக்கை என்றால் என்ன? இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப் பயணமாகவே பார்த்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களைக் […]
நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி?
நஜ்ஜாஷி மன்னர் இஸ்லாத்தை ஏற்றது எப்படி? நஜ்ஜாஷி மன்னர் குறித்து அஹ்மத் என்ற ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி அவர் எவ்வாறு இஸ்லாத்தை மறைமுகமாக ஏற்றார் என்று தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதக்கேட்டதும் அவர் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அபீசீனியா ஹிஜ்ரத் சம்பந்தமாக விரிவான செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது ஒரு நீண்ட சம்பவம். அதில் முக்கிய நிகழ்வுகளை எடுத்து வைக்கிறோம். 1649 حَدَّثَنَا يَعْقُوبُ حَدَّثَنَا أَبِي […]
குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்?
குழந்தைப் பருவத்தில் பேசியவர்கள் எத்தனை பேர்? கேள்வி: கீழ்க்காணும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா என்பதற்கு விளக்கம் தரவும்! மிஹ்ராஜ் பயணத்தின் போது ஒரு இடத்தில், கஸ்தூரியை விட மிக்க வாசனையைக் கொண்ட அதிசயமான மணமொன்றினை நுகர்ந்த. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் அதைப் பற்றி கேட்டார்கள். அதற்கு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் "இந்த வாசனை 'மாஷித்தா'வும் அவருடைய குடும்பத்தினர்களும் இருக்கக் கூடிய (கப்ர் அல்லது சுவர்க்க மாளிகை) இடத்திலிருந்து வருகின்ற வாசனை" என்று கூறினார்கள். […]
மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?
மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது? இர்ஃபான், தர்மபுரி பதில்: மதீனாவில் நபிமார்களின் அடக்கத்தலங்கள் உள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. صحيح البخاري 435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، […]
ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்?
ஆதம், ஹவ்வா ஆகியோரின் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் திருமணம் செய்தது ஏன்? கேள்வி: ஆதம், ஹவ்வா இருவர் மூலமே மனித குலம் பல்கிப் பெருகியதாக இஸ்லாம் கூறுகிறது. ஆதம், ஹவ்வா ஆகியோரின் நேரடிப் புதல்வர்கள் தமது சகோதரிகளைத் தானே திருமணம் செய்திருக்க முடியும்? சொந்தச் சகோதரியை மணப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? என்று எனது பிற மத நண்பர் கேட்கிறார். விளக்கம் தரவும். – எம். தவ்ஃபீக் அஹ்மத், தமாம். பதில்: ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே […]
நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக?
நபி (ஸல்) அவர்கள் கதீஜாவை மணந்தது எதற்காக? கேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய செல்வச் சீமாட்டி கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தது ஏன்? பணம் இருந்ததால் தான் விதவைப் பெண்ணான கதீஜா (ரலி) அவர்களை மணம் முடித்தார்கள் என்று ஒரு பிற மத சகோதரி கூறுகிறார்! இதற்கு என்ன விளக்கம்? – சி. முஹம்மது வாசிம், கொள்ளுமேடு பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தான் இறைவனின் தூதராக […]
கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்?
கல்லைத் தொட்டு முத்தமிடுவது ஏன்? கேள்வி : மக்கா (கஅபா)வில் உள்ள ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறீர்களே! மேலும் இது சொர்க்கத்திலிருந்து வந்த கல் என்று கூறுகிறீர்கள். இந்து சகோதரர்களும் லிங்கம் என்னும் கல் சொர்க்கத்திலிருந்து வந்தது எனக் கூறுகிறார்கள் என்று ஒரு முறை சவூதி – ரியாத்தில் நடந்த கலந்துரையாடலில் ஒரு பிற மத சகோதரர் கேட்டார். விளக்கம் தேவை. செய்யது முஹைதீன், வேலூர். பதில் : மக்காவில் உள்ள ஆலயமாகிய கஅபாவின் சுவரில் […]
கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது?
கஅபாவுக்குள்ளே என்ன இருக்கிறது? கேள்வி: நீங்கள் ஹஜ் செய்யும் போது கஅபாவில் உள்ள எங்களின் கடவுளைச் சுற்றி நான்கு புறமும் தடுப்புச் சுவர் கட்டி வழிபடுகிறீர்கள். கஅபா உங்களுக்கு உள்ளது அல்ல. இது இந்துக்களின் தெய்வம் என மராட்டிய இந்து நண்பர் கேட்கிறார். அவருக்கு என்ன விளக்கம் அளிக்கலாம்? – எம். சையத் அலி, சாக்கிநாக்கா, மராட்டியம். பதில்: கஅபா என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர் இவ்வாறு உங்களிடம் […]
நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா?
நபிமார்களின் உயிரைக் கைப்பற்றும் பொழுது மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா? என்று கேட்கப்படுமா? கேள்வி ? சாதாரண மனிதர்களின் உயிர் கைப்பற்றப்படுவது போல் நபிமார்களின் உயிர் கைப்பற்றப்படுவதில்லை. மலக்குல் மவ்த் வந்து, உங்களுக்கு மறுமை வேண்டுமா? உலக வாழ்வு வேண்டுமா என்று கேட்டு அவர்களின் சம்மதத்தின் பேரில் தான் கைப்பற்றுவார்கள் என்று ஒரு மவ்லவி ஜும்ஆவில் கூறினார். இதற்கு ஆதாரம் உள்ளதா? எஸ்.எம். செய்யது முஹம்மது, சென்னை இது ஆதாரப்பூர்வமான செய்தி தான். புகாரியில் இந்தக் கருத்தைத் தாங்கிய […]