அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ்

அத்தியாயம் : 91

அஷ்ஷம்ஸ் – சூரியன்

மொத்த வசனங்கள் : 15

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக! 379

2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக! 379

3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக! 379

4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! 379

5. வானத்தின்507 மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக! 379

6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக! 379

7. உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! 379

8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.

11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.

12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.

13. "இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!'' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (சாலிஹ்) கூறினார்.

14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களின் இறைவன் அவர்களைத் தரைமட்டமாக்கினான்.

15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.

 

Leave a Reply