அத்தியாயம் : 92 அல் லைல்

அத்தியாயம் : 92

அல் லைல் – இரவு

மொத்த வசனங்கள் : 21

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக! 379

2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக! 379

3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன்368 மீது சத்தியமாக! 379

4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.

5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.26

8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.26

11. அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது.

12. நேர்வழி நம்மைச் சேர்ந்தது.

13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.

14. கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.

15. துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் எரிய மாட்டார்கள்.

16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.

17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.

18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.26

21. பின்னர் அவர் திருப்தியடைவார்.

 

Leave a Reply