அர்பாப் என்று அழைக்கலாமா?

ஏகத்துவம் 2005 மே

கேள்வி :

அரபு நாடுகளில் முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள்.3:64 வசனத்தில்அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா?

கதீஜா ஜெஸ்மின், துபை

பதில் :

அர்பாப் என்பது ரப் என்பதன் பன்மையாகும்.

ரப் என்ற வார்த்தைக்கு பரிபாலிப்பவன், எஜமானன், தலைவன் என்று பல்வேறுஅர்த்தங்கள் உள்ளன.

ரப் என்ற வார்த்தையை அல்லாஹ் தனக்குப் பயன்படுத்தியிருப்பது போலவேமனிதர்களுக்கும் பயன்படுத்தியுள்ளான்.

என் சிறைத் தோழர்களே! உங்களில் ஒருவர் தனது எஜமானனுக்கு மதுவைப் புகட்டுவார்.மற்றவர் சிலுவையில் அறையப் படுவார். அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும். எதுகுறித்து விளக்கம் கேட்கிறீர்களோ அந்த விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டது.

(அல்குர்ஆன் 12:41)

இந்த வசனத்தில் எஜமானனுக்கு என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் ரப் என்றவார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலாளிகளை அர்பாப் என்றுஅழைப்பதில் தவறில்லை.

எனினும் அல்லாஹ்வின் பண்புகளைக்குறிப்பிடும் பெயர்களை மனிதர்களுக்குப்பயன்படுத்தும் போது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கூற வேண்டும்.

உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. இதற்குசெவியுறுபவன் என்று பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் உள்ளது. எனவேமனிதனும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது.

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன் 112:4)

தனக்கு நிகராக யாருமில்லை என்றுஅல்லாஹ் அறிவித்து விட்டதால் ஸமீவுன் என்றுஅல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது அவனது தகுதிக்குத் தக்க அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன். எவ்வளவு தொலைவிலிருந்துஅழைத்தாலும் கேட்பவன். அதாவது அனைத்தையும் செவியுறுபவன் என்று இதனைக்கூறலாம்.

ஆனால் மனிதனைச் செவியுறுபவன் என்று கூறும் போது, இந்தக் கருத்தில் விளங்கக்கூடாது. ஏனெனில் ஒரேநேரத்தில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்டு விளங்கிக் கொள்ளமனிதனால் முடியாது. எனவே மனிதனுக்குத் தக்க பொருளில் விளங்க வேண்டும்.

அது போன்றே ரப் என்ற வார்த்தையைஇறைவனுக்குப் பயன்படுத்தும் போது,அனைத்தையும் பரிபாலிப்பவன், அகிலங்கள் அனைத்திற்கும் எஜமானன் என்ற கருத்தில்புரிந்து கொள்ள வேண்டும்.

ரப் என்ற வார்த்தையை மனிதனுக்குப் பயன்படுத்தும் போது, சாதாரண எஜமானன்,முதலாளி என்ற கருத்தில்புரிந்து கொள்ள வேண்டும்.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit