ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

ஒன்றை மறந்து விட்டால் ஸலவாத் சொல்ல வேண்டுமா

எதையாவது மறந்து விடும் போது ஸலவாத் கூறினால் உடனே அது நினைவுக்கு வரும் என்று கூறுகிறார்களே இது உண்மையா?

M.H.M.நிம்சாத்.

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதின் சிறப்பைக் குறித்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. ஆனால் ஸலவாத்துச் சொன்னால் மறந்த விஷயம் நினைவுக்கு வந்துவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக எந்த ஹதீஸையும் நாம் பார்க்கவில்லை.

யார் உங்களிடம் இதைக் கூறினார்களோ அவர்களிடம் இதற்கு ஆதாரத்தைக் கேளுங்கள்.

Leave a Reply