173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

குறிப்பிட்ட சில குற்றங்களைச் செய்தவர்கள் நிரந்தரமான நரகத்தை அடைவார்கள் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் கூறுகிறது. ஆயினும் இவ்வசனங்களில் (6:128, 11:107, 11:108) அதில் விதிவிலக்கு உள்ளதாகக் கூறுகிறது. நிரந்தரமான நரகம் என்று கூறி விட்டு அல்லாஹ் நாடியதைத் தவிர என்று …

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு Read More

172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்

விண்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது. விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் இந்த அனுபவத்தை உணர முடியும்.

172. விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம் Read More

171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. …

171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா? Read More

170. பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது

பிற மதக் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று இவ்வசனம் (6:108) கூறுகின்றது. அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கையில் முழு அளவுக்கு இஸ்லாம் உறுதியாக நிற்கின்றது. அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் …

170. பிற மதத்தவர்களின் கடவுள்களை ஏசக்கூடாது Read More

169. திருக்குர்ஆனின் உயர்ந்த நடை

திருக்குர்ஆனை இறைவேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்து ஓதிய போது அதன் உயர்ந்த நடை அன்றைய மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. எழுதவும், படிக்கவும் தெரியாத இந்த மனிதர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் உள்ள இந்த நூலை இயற்றவே முடியாது …

169. திருக்குர்ஆனின் உயர்ந்த நடை Read More

168. குருடரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும்

இந்த அத்தியாயத்தில் (80:1-12) முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. உம்மு மக்தூம் என்பவரின் மகன் அப்துல்லாஹ். இவர் கண் தெரியாதவர். அன்றைய சமுதாயத்தில் இழிவாகக் கருதப்பட்டவர். ஆரம்ப கால முஸ்லிம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர் குலத்தாரோடு பேசிக் …

168. குருடரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் புறக்கணிப்பும் Read More

167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும்

இவ்வசனத்தில் (6:98) கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படும் இடம் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வசனத்தில் இறைவன் பயன்படுத்தியிருக்கின்ற ஒப்படைக்கப்படும் …

167. தங்குமிடமும், ஒப்படைக்கப்படும் இடமும் Read More

166. கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை

கப்ரு எனும் ஆன்மாக்களின் உலகத்தில் தீயவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள்; நல்லவர்கள் இன்பம் அனுபவிக்கிறார்கள் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகள் இருக்கின்றன. முஸ்லிம்களும் அவற்றை நம்புகின்றார்கள். ஆனால் திருக்குர்ஆனில் கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை பற்றியோ, அங்கே …

166. கப்ரு என்னும் மண்ணறை வாழ்க்கை Read More

165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள்

மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் பற்றி இவ்வசனங்கள் (4:97, 6:61, 6:93, 7:37, 8:50, 16:28, 16:32, 32:11, 47:27, 79:1,2) கூறுகின்றன. மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்ற இஸ்ராயீல் என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான் என்று பரவலாக தமிழக முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

165. உயிர்களைக் கைப்பற்றும் வானவர்கள் Read More

164. இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன?

இவ்வசனங்களில் (3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16) நபிமார்களைப் பற்றிக் கூறும்போது அவர்களுக்கு வேதத்தையும் ஹுக்மையும் வழங்கியதாக அல்லாஹ் கூறுகிறான். ஹுக்ம் என்றால் அதிகாரம் என்று பொருள். திருக்குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்ற நபிமார்களை நாம் எடுத்துக் கொண்டால் அந்த நபிமார்களில் பெரும்பாலானவர்களுக்கு …

164. இறைத் தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரம் என்ன? Read More