133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா?

இவ்விரு வசனங்களும் (4:157, 158) ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறுகின்றன. ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள்மாறாட்டம் காரணமாக வேறொருவரைத்தான் யூதர்கள் கொன்றனர் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா? Read More

132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை

திருக்குர்ஆன் மட்டுமே போதும்; திருத்தூதர்களின் வழிகாட்டுதல் ஏதும் தேவையில்லை என்று வாதிடுவோருக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை என்று இந்த வசனங்கள் (4:150, 151, 152) கூறுகின்றன. "அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் இடையே வித்தியாசப்படுத்தி சிலதை ஏற்போம். வேறு சிலதை நிராகரிப்போம் …

132. அல்லாஹ்வுக்கும் தூதர்களுக்குமிடையே வேற்றுமை Read More

131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

இவ்வசனத்தில் (4:140) அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்வோரைக் கண்டால் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதுடன் இதுபற்றி முன்னரும் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். முன்னர் அறிவுறுத்தியதாக அல்லாஹ் இங்கே சுட்டிக்காட்டும் வசனம் ஆறாவது அத்தியாயத்தில் உள்ள 68வது வசனமாகும்.

131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம் Read More

130. ஜகாத் கட்டாயக் கடமை

திருக்குர்ஆனின் 9:60 வசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஜகாத்தைக் குறிப்பிடுவது ஆகும். அரபு மூலத்தில் ஸதகா – தர்மம் – என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நாமாக விரும்பிச் செய்யும் தர்மத்தையும், கட்டாயக் கடமையான ஜகாத்தையும் குறிக்கும். ஆனால் …

130. ஜகாத் கட்டாயக் கடமை Read More

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு

இவ்வசனத்திலும், (4:127) இதைத் தொடர்ந்து வரும் வசனங்களிலும் பெண்கள் குறித்த சட்டங்களை அல்லாஹ் சொல்லத் துவங்குகிறான். அவ்வாறு சொல்வதற்கு முன்னர் பெண்கள் சம்மந்தமாக முன்னர் சில சட்டங்களைக் கூறி இருப்பதை நினைவுபடுத்துகிறான். இங்கே அல்லாஹ் நினைவுபடுத்துவது 4:2 முதல் 4:9 வரையிலான …

129. பெண்கள் பற்றி மார்க்கத் தீர்ப்பு Read More

128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ

வேதத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறும் இவ்வசனம் (4:105) மற்றொரு முக்கியமான செய்தியையும் கூறுகிறது. அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம் என்று …

128. திருக்குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ Read More

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை

போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான். ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.

127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை Read More

126. போர்க்களத் தொழுகை

இவ்வசனம் (4:102) போர்க்களத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பதைக் கூறுகிறது. போர்க்களத்திலும், எதிரிகள் தாக்கி விடுவார்கள் என்று அச்சம் நிலவும்போதும் இமாம் இரண்டு ரக்அத் கொண்ட தொழுகையை நடத்துவார். ஆனால் மக்கள் இரு அணியாகப் பிரிந்து, ஒரு அணியினர் களத்தில் நிற்க …

126. போர்க்களத் தொழுகை Read More

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல்

இவ்வசனத்தில் (4:101) பயணத்தின்போது தொழுகையைச் சுருக்கித் தொழலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சினால் நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை.

125. பயணத்தில் தொழுகையைச் சுருக்குதல் Read More

124. வதந்தி பரப்பக் கூடாது

கேள்விப்பட்ட செய்திகளைப் பரப்பி குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், தகுதியானவர்களின் கவனத்துக்கு மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்றும் இவ்வசனம் (4:83) கூறுகிறது. நன்மை செய்கிறோம் என்ற பெயரில் பயத்தைப் பரப்புவதைச் சிலர் விளையாட்டாகக் கடைப்பிடித்து வருகின்றனர். பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் …

124. வதந்தி பரப்பக் கூடாது Read More