மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

மறுமை நாளில் இறைவன் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?

ஜனாஃபர்

றுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.

 7443 حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنِي الْأَعْمَشُ عَنْ خَيْثَمَةَ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல் : புகாரி 7443

இறைவன் குறிப்பிட்ட மொழியில் தான் மறுமையில் பேசுவான் என எந்த விவரமும் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படவில்லை.

எனவே மறுமையில் அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவன் பேசலாம். அல்லது ஏதாவது ஒரு மொழி பற்றிய ஞானத்தை இறைவன் எல்லோருக்கும் வழங்கி அந்த மொழியில் அவர்களிடம் பேசலாம்.

Leave a Reply