ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

ஹஜ்ருல் அஸ்வத் அல்லாஹ்வின் வலது கையா?

க அபாவின் மூலையில் பதிக்கப்பட்டுள்ள ஹஜருல் அஸ்வத் எனும் கல் இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கல்லாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிட்டுள்ளனர்.

ஆயினும் ஹஜரில் அஸ்வத் குறித்து பலவீனமான பொய்யான பல செய்திகளும் உலா வருகின்றன. அவற்றை நாம் ஆராய்வோம்.

முதல் ஹதீஸ்

تاريخ بغداد – (6 / 328)

أخبرنا على بن محمد بن علي الأيادي أخبرنا احمد بن يوسف بن خلاد العطار حدثنا الحارث بن محمد حدثنا إسحاق بن بشر الكاهلى حدثنا أبو معشر المدائني عن محمد بن المنكدر عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه و سلم الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده

ஹஜ்ருல் அஸ்வத் எனும் கல் பூமியில் அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு அடியார்களிடம் அல்லாஹ் முஸாஃபஹா (கை குலுக்கல்) செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 328

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. இந்தச் செய்தியைப் பதிவு செய்த கதீப் பக்தாதி அவர்கள் இந்தச் செய்தி பொய்யானது என்பதை அந்த இடத்திலேயே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்ற இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவரைப் பற்றி கதீப் பக்தாதி அவர்கள்

والكاهلى من أهل الكوفة يروى عن مالك بن أنس وأبي معشر نجيح وكامل أبي العلاء وغيرهم من الرفعاء أحاديث منكرة قال أبو يعقوب كذاب قال أبو حفص عمر بن علي وإسحاق بن بشر الكاهلى متروك الحديث

அபூ மிஃஷர், மாலிக் பின் அனஸ், அபுல் அலா எனும் காமில் ஆகியோர் வழியாக இவர் மறுக்கத்தக்க ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று கூறுகிறார்.

மேலே உள்ள ஹதீஸை இவர் அபூ மஃஷர் வழியாகவே அறிவித்துள்ளார்.

அபூ யஃகூப் என்பவர் இவர் பொய்யர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டிய (பொய்யர்) ஆவார் என்று அபூஹஃப்ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தியை இப்னு அதீ அவர்களும் தமது அல்காமில் என்ற நூலில் பதிவு செய்துவிட்டு

الكامل في ضعفاء الرجال ـ موافق للمطبوع – (1 / 342)

قال الشيخ وإسحاق بن بشر الكاهلي قد روى غير هذه الأحاديث وهو في عداد من يضع الحديث

இஸ்ஹாக் பின் பிஷ்ர் அல்காஹிலீ என்பவர் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர்களில் உள்ளவர்.

என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாவது ஹதீஸ்

صحيح ابن خزيمة -موافق للمطبوع – (4 / 221)

2737 – ثنا الحسن الزعفراني ثنا سعيد بن سليمان ثنا عبد الله بن المؤمل سمعت عطاء يحدث عن عبد الله بن عمرو : أن رسول الله صلى الله عليه و سلم قال : يأتي الركن يوم القيامة أعظم من أبي قبيس له لسان و شفتان يتكلم عن من استلمه بالنية و هو يمين الله التي يصافح بها خلقه

மறுமை நாளில் ருக்குனுல் யமானி என்பது அபூ குபைஷ் மலையை விட பிரமாண்டமானதாக வரும். அதற்கு ஒரு நாவு, இரண்டு உதடுகள் இருக்கும். அதை முத்தமிட்டவர்களைப் பற்றி அது பேசும். அது அல்லாஹ்வின் வலது கையாகும். அதைக் கொண்டு அல்லாஹ் படைப்பினங்களை முஸாஃபஹா செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: இப்னு ஹுஸைமா, பாகம்: 4, பக்: 221

இந்தச் செய்தி தப்ரானி அவர்களின் கபீர், அவ்ஸத் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்மானது அல்ல. இந்தச் செய்தியில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவராவார்.  இவரைக் குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

تهذيب التهذيب ـ محقق – (6 / 42)

وقال ابن أبي خيثمة وغير واحد عن ابن معين ضعيف وقال النسائي ضعيف وقال أبو داود منكر الحديث.

அப்துல்லாஹ் பின் முஅம்மல் என்பவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன், நஸாயீ ஆகியோர் கூறியுள்ளனர். ஹதீஸ் துறையில் மறுப்பட வேண்டியவர் என்று அபூதாவுத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்: 6, பக்கம்: 42

ஹஜ்ருல் அஸ்வத், ருக்குனுல் யாமனீ ஆகியவை அல்லாஹ் வலது கை என்ற கருத்தில் வரும் அனைத்தும் செய்திகளும் பலவீனமானவையாகும்.

எனினும் ஹஜ்ருல் அஸ்வத், ருக்னுல் யாமனீ ஆகியவற்றை முத்தமிட வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

எம்.ஐ.சுலைமான்

12.01.2017. 0:48 AM

Leave a Reply