என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை

ஏகத்துவம் நவம்பர் 2006 என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை அபூஉஸாமா நம்மிடம் வருகை தந்த இனிய ரமளான் நமக்குத் தலை சிறந்த பள்ளிக்கூடமாகத்திகழ்ந்தது. அந்தப் பள்ளிக்கூடம் நம்மைக் குர்ஆனுக்கு மிக அருகில், அண்மையில்கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. இரவுத் தொழுகைகளின் மூலம் …

என்றும் தொடரட்டும் இந்த இரவுத் தொழுகை Read More

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள ்கை

ஏகத்துவம் நவம்பர் 2006 இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை எம். ஷம்சுல்லுஹா இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஏகத்துவஇதழ் ஒருபரேலவிஸ எதிர்ப்பு இதழ் என்றால் அது மிகப் பொருத்தமான ஒன்று தான். அந்தஅளவுக்கு இந்த இதழில் பரேலவிஸத்திற்கு …

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள ்கை Read More

தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு

ஏகத்துவம் நவம்பர் 2006 தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு எம். ஷம்சுல்லுஹா மனாருல் ஹுதா இப்போது தான் பகிரங்கமாக பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்தொடுக்கத் துவங்கியுள்ளது. கடந்த காலத்தில் இவர்கள் அதைக் கண்டித்ததே கிடையாதுஎன்று ஒரேயடியாகக் குற்றம் சாட்டவில்லை. ஆனால், உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்து உரைப்பீராக! இணைகற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15:94) என்ற வசனத்திற்கேற்ப அதைப் போட்டு உடைக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். 1. பரேலவிகள் தூக்கிப் பிடிக்கும் தரீக்கத்தையும், சூபிஸத்தையும் இவர்களும் தூக்கிப்பிடிப்பது. 2. இது போன்ற பிரச்சனைகளை முன் வைக்கும் போது சமுதாயத்தில் எதிர்ப்பலைகள்சமுத்திரமாகத் திரண்டெழுந்து வரும். அவற்றை எதிர் கொள்ளும் போது பிழைப்புக்குமட்டும் பாதகம் வருவதில்லை. புகழுக்கும் சேர்த்துப் பாதகம் வரும் என்பதால்பரேலவிகளுக்கு எதிராக அவர்கள் பொங்கி எழவில்லை. ஆனால் 1980களில், அந்தச் சமுதாயத்தில் நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள், "இப்படி எவரேனும் வர மாட்டார்களா?'' என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்; ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் அப்போது யாரும் கிளம்பி வரவில்லை. அது மட்டுமின்றிஜமாஅத்துல் உலமாவே பரேலவிஸத்திற்கு ஆதரவாகக் களமிறங்கியிருந்தது. அந்தச் சமயத்தில் சகோதரர் பி.ஜே. தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாவின்செயலாளராகவோ, துணைச் செயலாளராகவோ இருந்தார். நான் துணைச் செயலாளராகஅல்லது செயற்குழு உறுப்பினராக இருந்தேன்.  அப்போது 1985ல் தஞ்சாவூரில்"வலிமார்கள் மாநாடு'' என்ற பெயரில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. நானும், மறைந்த மேதை பி.எஸ். அலாவுதீன், பி.ஜே., யூசுப் மிஸ்பாஹி, மாயவரம்அலீஸ் கைலி சென்டர் உரிமையாளர் மன்சூர் ஆகியோரும் அந்த வலிமார்கள் மாநாட்டில்பார்வை யாளர்களாகக் கலந்து கொண்டோம். அப்போது அந்த மாநாட்டில் பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு ஒருதரப்பு ஆலிம்களும், அதை எதிர்த்து மற்றொரு தரப்பு ஆலிம்களும் உரையாற்றினர். பரேலவிஸத்திற்கு வக்காலத்து வாங்கிப் பேசிய ஆலிம்கள், அல்லாஹ்வின் தகுதியைஅவ்லியாக்களின் தகுதியோடு ஈடாக்கி, இணையாக்கி, ஷிர்க்கை அரங்கேற்றிப்பேசினார்கள். இதைக் கண்டு பொறுக்க முடியாத நாங்கள் அதற்கு ஒரு மறுப்பு வெளியிடவேண்டும் என்று விரும்பினோம். அப்போது பொருளாதாரத்தில் ஓரளவு வசதி பெற்றிருந்த சகோதரர் மன்சூர் அவர்கள், நான்என் பெயர் போட்டு வெளியிடுகின்றேன் என்று குறிப்பிட்டார். அதற்கு சகோதரர் பி.ஜே.அவர்கள், "அப்படி வெளியிட்டால் அதனால் வரும் எதிர்ப்பலைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது'' என்று குறிப்பிட்டு, தானே வெளியிடுவதாகச் சொன்னார். அது போல்தன் பெயரைப் போட்டு ஒரு பிரசுரம் வெளியிட்டார். அதற்காக அப்போதைய அவரதுமாதச் சம்பளம் 300 அல்லது 350 ரூபாயை அர்ப்பணித்தார். அந்தப் பிரசுரம் இதோ: ஒரு நாடகம் அரங்கேறியது நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சிடும் சோழ வள நாட்டின் தலைநகர் தஞ்சையில் மக்கள்மனங்களில் நஞ்சைக் கலந்திடும் எண்ணத்துடன் "வலிமார்கள் சிறப்பு மாநாடு'' என்றபெயரில் திட்டமிட்டு ஒரு நாடகம் அண்மையில் அரங்கேறியது. பெரியார்களின்பெயர்களால் தில்லுமுல்லுகளும், திருகு தாளங்களும் மலிந்து விட்ட இக்காலத்தில்,மாநாட்டில் ஆற்றப்படவிருக்கும் உரைத் தலைப்புகளில் ஒன்றாக, "தர்ஹாக்களின் பலாபலன்கள்'' என்பதும் அச்சிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு மனங்குமுறிய பன்னூற்றுக் கணக்கான சன்மார்க்கப் பேரறிஞர்கள்மாநாட்டை ஏற்பாடு செய்து நடத்துபவர்கள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட, "தஞ்சை,புதுக்கோட்டை மாவட்டங்களின் ஜமாஅத்துல் உலமா சபை''யினுடைய அப்போதையபொதுச் செயலாளர் மவ்லானா ஆவூர்  அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களிடம் விளக்கம்கேட்ட போது, "தரீக்காக்களின் பலா பலன்கள்'' என்பது தான், "தர்ஹாக்களின் பலாபலன்கள்'' என்று தவறாக அச்சாகி விட்டது என்று சொல்லி நழுவப் பார்த்தார். …

தமிழகத்தில் பரேலவிஸ எதிர்ப்புப் போர் தொடங்கிய வரலாறு Read More

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

ஏகத்துவம் நவம்பர் 2006   பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் பரேலவிஸம்வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி ஆலகால விஷ விருட்சமாகவிரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும்மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்!சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும்உயிருடன் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள்! இவையெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம்இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது. நாங்கள் சங்கரன்பந்தல்மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தீன் விளக்கக் குழு என்ற பெயரில்வாரந் தோறும் வெள்ளிக்கிழமை இரவு அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில்தமிழகத்தில் உள்ள பரவலான மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்றஅழைப்போம். கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம், இந்தச் சிந்தனை ஓட்டத்தைப்பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா? என்று கேட்டோம். சிலரிடத்தில் தெளிவான பதில் இருக்கும்; சிலரிடம் பசப்பல் இருக்கும். இதல்லாமல் சில அறிஞர்களிடம் நேரடியாகப் போய் கேட்டிருக்கிறோம். போனஇடத்திலும் அதே நிலை தான். இருப்பினும் இம்முயற்சியைத் தொடர்ந்ததற்குக் காரணம் இவர்களையும் ஒன்றாகச்சேர்த்துக் கொண்டு பரேலவிஸத்திற்கு எதிரான போர்க்களத்தில் இறங்கலாம் என்றநோக்கத்தில் தான். ஆனால் இம்முயற்சிக்கு, தஞ்சையில் நடைபெற்ற வலிமார்கள்மாநாடு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. (அந்த வரலாறு தனிக் கட்டுரையாக இவ்விதழில்கூறப் பட்டுள்ளது) அதனால் தனித்துக் களம் இறங்கினோம். இந்த பரேலவிஸத்தை எதிர்த்துகாயல்பட்டிணத்தில் முபாஹலாவை சந்தித்தோம். அல்லாஹ்வின் அருளால்தவ்ஹீதில் நாள் தோறும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு களம் இறங்கும் முன் யாராவது இதைச் சொல்ல மாட்டார்களா? என்றுஏங்கினோம். அதிலும் குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்கள் இதற்குக் கை கொடுக்கமாட்டார்களா? என்றெல்லாம் எதிர்பார்த்தோம். ஏனென்றால் தேவ்பந்த் தாருல் உலூமின்அடிப்படையே பரேலவிஸத்திற்கு எதிராக அமைந்தது தான். ஆனால் அவர்களும் இதைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவில்லை. இதற்குக் காரணம்,தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் தான். இவ்வாறு பரேலவிஸத்தைப் பற்றி அவர்கள் பகிரங்கமாகச் சொல்லாததால்தேவ்பந்தியில் ஓதி வந்த ஆலிம்களே இந்த பரேலவிஸத்திற்குப் பலியாகி விட்டனர்.அதைப் பரப்பும் பிரச்சாரகர்களாகவும், இருட்டில் உட்கார்ந்து யாமுஹய்யித்தீன் என்றுஅழைக்கும் முஷ்ரிக்குகளாகவும் மாறி விட்டனர். இதில் வேதனைக்குரிய விஷயம், பரேலவிஸத்திற்கு எதிரான சிந்தனை கொண்டஆலிம்கள் நமக்கு எதிராகச் செய்த பிரச்சாரத்தில் ஒரு சதவிகிதம் கூடபரேலவிஸத்திற்கு எதிராகச் செய்யவில்லை. நான்கு மத்ஹபுகள் என்ற சுவர்களுக்குள் இவர்களும் சங்கமிக்கிறார்கள் என்றகாரணத்தால் அவர்களை விட்டு வைத்தார்கள். ஆனால் இன்று அந்த பரேலவிகளைஎதிர்த்துக் களமிறங்கியிருக்கின்றார்கள். சென்னையிலுள்ள காஷிபுல் ஹுதா அரபிக் கல்லூரி சார்பில் வெளியிடப்படும் மனாருல்ஹுதா என்ற மாத இதழில் பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஒருகட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதிலும் எங்கே தங்களை வஹ்ஹாபிகள் என்றுமக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் இவர்களை ஆட்கொள்ளாமல் இல்லை.அதனால் ஆங்காங்கே வஹ்ஹாபிகளைப் பற்றிக் குறை சொல்லி இருந்தாலும்,பரேலவிஸத்தைக் கடுமையாக லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கின்றார்கள். இப்படி காலம் கடந்தேனும் இந்த உண்மையைப் போட்டு உடைத்தமைக்கு ஏகத்துவத்தின்சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் பரேலவிஸம்வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அடிப்படைக் காரணம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டுஅடிப்படைகளை விட்டு வெளியே சென்று, மத்ஹபுகளை இஸ்லாத்தின்அடிப்படையாக்கியது தான் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்ஷா அல்லாஹ்அதையும் இவர்கள் உணரும் காலம் வெகு தூரம் இல்லை. மனாருல் ஹுதா இதழில் வெளியான, பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்றகட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகின்றோம். பரேலவிகள் – ரிளாகானிகள் பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்கவழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார். உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்றுபிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான்.தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர்வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு "ரிளாகானிய்யத்''என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி "பரேலவிய்யத்'' என்றும் கூறுவர். காதியானியிடம் ஆரம்பக் கல்வி இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம்காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர்,இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமானசான்றாகும். ஐயமும் தெளிவும் ஐயம்: ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றிவிட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்புகொடுப்பதற்குக் காரணம் என்ன? தெளிவு: நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறியவேண்டுமெனில், பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்தியமுஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். …

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை Read More

நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரை யல்ல!

ஏகத்துவம் நவம்பர் 2006 நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரையல்ல! பிறை விஷயத்தில் கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதைக்கண்டித்து, கடந்த அக்டோபர் மாத இதழில் நாம் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பிறையை முன்கூட்டியே கணித்துத் …

நாங்கள் பின்பற்றுவது தூதரைத் தான்! யூதரை யல்ல! Read More

விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள்

ஏகத்துவம் நவம்பர் 2006 விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள் "சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர் களுக்குப் பாரமான தொழுகைவேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்)தொழுவதில்உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்துவிடுவார்கள். இகாமத் …

விடை பெற்ற ரமளான் விடுக்கும் செய்திகள் Read More

நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு

ஏகத்துவம் அக்டோபர் 2006 நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு தமிழக்கத்தில் நோன்பு துறக்கும்துஆவாக "அல்லாஹும்ம லக்க சும்த்து..”. என்றுதுவங்கும் துஆவைஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்றுமத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் …

நோன்பு திறக்கும் துஆ மறு ஆய்வு Read More

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்

ஏகத்துவம் அக்டோபர் 2006 அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் எஸ்.கே. மைமூனா பி.ஐ.எஸ்.சி. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது.அத்துடன்நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறுகூறுகின்றான். நம்பிக்கை …

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் Read More

பிறை கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு

ஏகத்துவம் அக்டோபர் 2006 பிறை கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு நம் வழி! தனி வழி! என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்.பிற மதத்தின் சாயல் கூட தாம் இருக்கும் போதும்,இறந்த பின்னரும் தமது மார்க்கத்தின்மீது படியாதவாறு அல்லாஹ்வின் …

பிறை கணிப்பு என்ற பெயரில் கலாச்சாரத் திணிப்பு Read More

ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும்

ஏகத்துவம் அக்டோபர் 2006 ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும் நோன்பு மற்றும் பெருநாட்கள் உலகெங்கிலும் ஒரே நாளில் அமைவதில்லை. ஒரு நாள்அல்லது இருநாட்கள் வித்தியாசத்தில் தான் அமைகின்றன. இதற்கு அடிப்படைக்காரணம் இந்த நாட்கள் பிறையை மையமாக வைத்துத் தீர்மானிக்கப் …

ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும் Read More