பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

ஏகத்துவம் நவம்பர் 2006
 

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்களிடம் பரேலவிஸம்வேரூன்றியது போலவே தமிழகத்திலும் அது வேரூன்றி ஆலகால விஷ விருட்சமாகவிரிந்து கிடந்தது. அதனுடைய விஷக் கனிகள் தான் விண்ணைத் தொட்டு நிற்கும்மனாராக்களைக் கொண்ட தர்ஹாக்கள்! அவற்றைப் போற்றிப் புகழ்கின்ற தரீக்காக்கள்!சூபிஸ தத்துவங்கள்! மவ்லிதுகள்! இருட்டு திக்ருகள்! வலிமார்கள் இறந்த பின்னும்உயிருடன் இருக்கிறார்கள், எனவே அவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்ற நம்பிக்கைகள்!

இவையெல்லாம் குர்ஆன், ஹதீஸுக்கு மாற்றமானவை என்ற சிந்தனை ஓட்டம்இறையருளால் நம்முடைய உள்ளங்களில் தோன்றியது. நாங்கள் சங்கரன்பந்தல்மதரஸாவில் பணியாற்றிக் கொண்டிருக்கையில், தீன் விளக்கக் குழு என்ற பெயரில்வாரந் தோறும் வெள்ளிக்கிழமை இரவு அன்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில்தமிழகத்தில் உள்ள பரவலான மதரஸாக்களிலிருந்து ஆலிம்களை உரையாற்றஅழைப்போம்.

கூட்டம் முடிந்த பின் விடிய விடிய அவர்களிடம், இந்தச் சிந்தனை ஓட்டத்தைப்பிரதிபலித்தோம். இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா? என்று கேட்டோம்.

சிலரிடத்தில் தெளிவான பதில் இருக்கும்; சிலரிடம் பசப்பல் இருக்கும்.

இதல்லாமல் சில அறிஞர்களிடம் நேரடியாகப் போய் கேட்டிருக்கிறோம். போனஇடத்திலும் அதே நிலை தான்.

இருப்பினும் இம்முயற்சியைத் தொடர்ந்ததற்குக் காரணம் இவர்களையும் ஒன்றாகச்சேர்த்துக் கொண்டு பரேலவிஸத்திற்கு எதிரான போர்க்களத்தில் இறங்கலாம் என்றநோக்கத்தில் தான். ஆனால் இம்முயற்சிக்கு, தஞ்சையில் நடைபெற்ற வலிமார்கள்மாநாடு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. (அந்த வரலாறு தனிக் கட்டுரையாக இவ்விதழில்கூறப் பட்டுள்ளது)

அதனால் தனித்துக் களம் இறங்கினோம். இந்த பரேலவிஸத்தை எதிர்த்துகாயல்பட்டிணத்தில் முபாஹலாவை சந்தித்தோம். அல்லாஹ்வின் அருளால்தவ்ஹீதில் நாள் தோறும் மக்கள் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு களம் இறங்கும் முன் யாராவது இதைச் சொல்ல மாட்டார்களா? என்றுஏங்கினோம். அதிலும் குறிப்பாக தேவ்பந்தி ஆலிம்கள் இதற்குக் கை கொடுக்கமாட்டார்களா? என்றெல்லாம் எதிர்பார்த்தோம். ஏனென்றால் தேவ்பந்த் தாருல் உலூமின்அடிப்படையே பரேலவிஸத்திற்கு எதிராக அமைந்தது தான்.

ஆனால் அவர்களும் இதைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வரவில்லை. இதற்குக் காரணம்,தங்களை வஹ்ஹாபிகள் என்று மக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் தான்.

இவ்வாறு பரேலவிஸத்தைப் பற்றி அவர்கள் பகிரங்கமாகச் சொல்லாததால்தேவ்பந்தியில் ஓதி வந்த ஆலிம்களே இந்த பரேலவிஸத்திற்குப் பலியாகி விட்டனர்.அதைப் பரப்பும் பிரச்சாரகர்களாகவும், இருட்டில் உட்கார்ந்து யாமுஹய்யித்தீன் என்றுஅழைக்கும் முஷ்ரிக்குகளாகவும் மாறி விட்டனர்.

இதில் வேதனைக்குரிய விஷயம், பரேலவிஸத்திற்கு எதிரான சிந்தனை கொண்டஆலிம்கள் நமக்கு எதிராகச் செய்த பிரச்சாரத்தில் ஒரு சதவிகிதம் கூடபரேலவிஸத்திற்கு எதிராகச் செய்யவில்லை.

நான்கு மத்ஹபுகள் என்ற சுவர்களுக்குள் இவர்களும் சங்கமிக்கிறார்கள் என்றகாரணத்தால் அவர்களை விட்டு வைத்தார்கள். ஆனால் இன்று அந்த பரேலவிகளைஎதிர்த்துக் களமிறங்கியிருக்கின்றார்கள்.

சென்னையிலுள்ள காஷிபுல் ஹுதா அரபிக் கல்லூரி சார்பில் வெளியிடப்படும் மனாருல்ஹுதா என்ற மாத இதழில் பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்ற தலைப்பில் ஒருகட்டுரையை வெளியிட்டுள்ளனர். அதிலும் எங்கே தங்களை வஹ்ஹாபிகள் என்றுமக்கள் சொல்லி விடுவார்களோ என்ற பயம் இவர்களை ஆட்கொள்ளாமல் இல்லை.அதனால் ஆங்காங்கே வஹ்ஹாபிகளைப் பற்றிக் குறை சொல்லி இருந்தாலும்,பரேலவிஸத்தைக் கடுமையாக லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கின்றார்கள்.

இப்படி காலம் கடந்தேனும் இந்த உண்மையைப் போட்டு உடைத்தமைக்கு ஏகத்துவத்தின்சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் பரேலவிஸம்வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அடிப்படைக் காரணம், குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டுஅடிப்படைகளை விட்டு வெளியே சென்று, மத்ஹபுகளை இஸ்லாத்தின்அடிப்படையாக்கியது தான் என்பதையும் மறந்து விடக் கூடாது. இன்ஷா அல்லாஹ்அதையும் இவர்கள் உணரும் காலம் வெகு தூரம் இல்லை.

மனாருல் ஹுதா இதழில் வெளியான, பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை என்றகட்டுரையின் சில பகுதிகளை இங்கே தருகின்றோம்.

பரேலவிகள் – ரிளாகானிகள்

பித்அத்தை அங்கீகரிப்பவர்கள், நவீன அனுஷ்டானங்களை இஸ்லாமிய வணக்கவழிபாடுகளைப் போன்று பாவித்துச் செய்யும் அனாச்சாரமான கொள்கைக்கு ஹிஜ்ரீ14ஆம் நூற்றாண்டில் புத்துயிரூட்டியவர் அஹ்மது ரிளாகான் என்பவராவார்.

உ.பி.யின் பரேலி எனும் ஊரில் ஹிஜ்ரீ 1272 ஷவ்வால் (கி.பி. 1856 ஜூன் 14) அன்றுபிறந்தார். தகப்பனார் பெயர் நகீஅலீ. இவருக்குத் தாயார் வைத்த பெயர் அம்மன் மியான்.தந்தை வைத்த பெயர் அஹ்மது மியான். பாட்டனார் தான் அஹ்மது ரிளா என்று பெயர்வைத்தார். இந்தப் பெயரே பிரபலமானது. இதனால் இக்கொள்கைக்கு "ரிளாகானிய்யத்''என்று கூறுவர். ஊரின்பால் தொடர்பு படுத்தி "பரேலவிய்யத்'' என்றும் கூறுவர்.

காதியானியிடம் ஆரம்பக் கல்வி

இவர் தனது ஆரம்பக் கல்வியை, தன்னை நபி என வாதிட்ட பொய்யன் மிர்ஸா குலாம்காதியானியின் சகோதரர் மிர்ஸா குலாம் காதிர் பேக்கிடமே கற்றார். இவர் பொய்யர்,இஸ்லாமிய உண்மைக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் என்பதற்கு இதுவே போதுமானசான்றாகும்.

ஐயமும் தெளிவும்

ஐயம்: ரிளாகான் பரேலவிக்கு முன்பே இந்தியாவில் பித்அத், அனாச்சாரங்கள் தோன்றிவிட்ட போது, தேவ்பந்த் உலமாக்கள் பரேலவிகளை மட்டும் சாடுவதற்கு, மறுப்புகொடுப்பதற்குக் காரணம் என்ன?

தெளிவு: நியாயமான கேள்வி தான். இதற்கான விடையை சரியாக அறியவேண்டுமெனில், பரேலவிகளுக்கு முன், பரேலவிகளுக்குப் பின் இருந்த இந்தியமுஸ்லிம்களின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு வித்தியாசங்கள்

பரேலவிகள் தோன்றுவதற்கு முன்பே பித்அத், அனாச்சாரங்கள் இருந்து வந்த போதிலும்பரேலவிகளுக்கும் அதற்கு முந்தைய பித்அத்வாதிகளுக்கும் இரண்டு வித்தியாசங்கள்உள்ளன.

முதல் வித்தியாசம்

பரேலவிகளுக்கு முன் எந்த ஆலிமும் பித்அத்தை இஸ்லாத்தின் போதனையாகவோ,மார்க்கத்தின் ஓர் அங்கமாகவோ கூறியதில்லை. இந்த பரேலவிகள் தான் முதன் முதலில்பித்அத்திற்கு இஸ்லாமிய வடிவம் கொடுத்து, இஸ்லாத்தின் ஓர் அங்கம் போல் ஒருமாயையை ஏற்படுத்தினார்கள்.

இரண்டாவது வித்தியாசம்

பித்அத்தைக் கண்டித்து சுன்னத்தை நிலைநாட்டும் உண்மையான உலமாக்களை முதன்முதலில் காஃபிர்கள் என்று முத்திரை குத்தியது பரேலவிகள் தான்.

இதன் விளைவு

தயக்கத்துடன், வெட்கத்துடன் செய்யப்பட்டு வந்த பித்அத்கள் புண்ணியமானதாகவும்,நன்மைக்கு உரியதாகவும் கருதப்பட்டு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பகிரங்கமாகஅரங்கேற்றம் பெறத் துவங்கின.

முன்பு, கவலையுள்ள ஆலிம்கள் பித்அத்தின் தீய விளைவுகளை எடுத்துக் கூறினால்தவ்பாச் செய்து சுன்னத்தைக் கடைப்பிடிக்கும் நிலை மக்களிடம் இருந்தது. ஆனால்பரேலவிகள் தலையெடுத்த பின், பித்அத்தை எதிர்த்து நபிகளாரின் சுன்னத்தைப் பேணும்உண்மையான நல்லடியார்களை காஃபிர்கள் என எண்ணும் நிலை உருவானது. இதனால்ஷிர்க்கிற்கு நெருக்கமான பித்அத் என்ற இப்பெரும்பாவத்திலிருந்து பெரும்பாலோருக்குதவ்பாச் செய்யும் வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.

ஆங்கிலேயர்களாவது அந்த உண்மையான தியாகசீலர்களை வஹ்ஹாபிகளாகத் தான்ஆக்கினார்கள். ஆனால் பித்அத்தை மார்க்கமாக்கிய தீய ஆலிம்களோ அவர்களைகாஃபிர்களாகவே ஆக்கி விட்டார்கள்.

எந்த உண்மையான உலமாக்கள் வந்திருக்காவிட்டால் இந்தியாவில் இஸ்லாமேஅழிந்திருக்குமோ அந்தப் புண்ணியவான்களை, இஸ்லாத்திற்காக இன்னுயிரை நீத்ததியாகச் செம்மல்களை காஃபிர் என்றால் வேறு யார் தான் முஸ்லிமாக இருக்க முடியும்?

இப்போது புரிகிறதா பித்அத்தும், பரேலவியிஸமும் எவ்வளவு கொடூரமானவை என்று?

ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வாவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்என்ன?

தினமும் ஏதேனும் ஓர் உண்மையான ஆலிமையோ, ஒரு குழுவையோ காஃபிர் என்றுமொத்தமாகவும் சில்லரையாகவும் ஃபத்வா கொடுக்காவிட்டால் ரிளாகான் பரேலவிக்குஅன்றைய பொழுது கழியாது.

இஸ்லாமிய வரலாற்றில் அல்லாஹ்வின் உண்மையான நல்லடியார்களை, தீனுக்காகத்தமது வாழ்நாளை மனத் தூய்மையோடு அர்ப்பணித்த தியாக சீலர்களை அசிங்கமான,கொச்சையான வார்த்தை களால் வசை பாடியது மட்டுமின்றி, காஃபிர் என்று கூறியமுதல் மனிதர் ரிளாகான் பரேலவி தான்.

ரிளாகான் பரேலவியின் காஃபிர் ஃபத்வா

ஒரு வரலாற்றுப் பார்வை

இந்தியாவில் முன்பிருந்தே ஆலிம்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் பல பாகங்களில்பிரிந்து வட்டார அளவில் மட்டும் தம் பணிகளைச் செய்து வந்தார்கள். கி.பி. 18ம்நூற்றாண்டின் பிற்பகுதியில் நாளுக்கு நாள் ஆங்கிலேயரின் எழுச்சி ஒரு புறம், மறுபுறம்அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி, ஒழுக்கம் எல்லா மட்டத்திலும்முஸ்லிம்களின் வீழ்ச்சி. இதைக் கவனத்தில் கொண்டு நாட்டின் பல பாகங்களில் பிரிந்துகிடக்கின்ற பல்வேறு சிந்தனை கொண்ட அனைத்து உலமாக்களும் ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயல்படலாம் என்றுமுடிவானது.

நத்வத்துல் உலமா

இதனடிப்படையில் மௌலானா முஹம்மது அலீ மூங்கீரி (ரஹ்) அவர்களின் பெரும்முயற்சியால் (கி.பி. 18ம் நூற்றாண்டு பிற்பகுதி) ஹிஜ்ரீ 1311ல் கான்பூரில், நாட்டின்அனைத்துப் பகுதியிலிருந்தும் பல்வேறு சிந்தனை கொண்ட முக்கிய உலமாக்கள்கூடினார்கள். இந்த அமைப்பிற்கு நத்வத்துல் உலமா (உலமாக்கள் சங்கம்) என்றும்பெயரிடப்பட்டது. அநேகமாக இந்திய வரலாற்றில் அதற்கு முன்பு இவ்வாறு அனைத்துஉலமாக்களும் கூடிய சரித்திரம் இல்லை.

வெளிநடப்பு

அனைத்து உலமாக்களும் ஓரணியில் திரண்ட பின் இனி இந்திய முஸ்லிம்களுக்குப்பிரகாசமான எதிர்காலம் தான் என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால் அந்த முதல்கூட்டத்திலேயே ஒரே ஒரு நபர் மட்டும் ஏதோ காரணம் கூறி வெளிநடப்புச் செய்து,கூட்டத்தைப் புறக்கணித்தார். அவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி.

புறக்கணித்தது மட்டுமன்றி நத்வத்துல் உலமாவின் அனைத்து ஆலிம்களையும் காஃபிர்ஃபத்வா கொடுத்து, சொல்ல முடியாத அசிங்கமான வார்த்தைகளால் வசை பாடி நூலுக்குமேல் நூல் எழுதினார். கிட்டத்தட்ட நூறு நூல்கள் எழுதி பல்லாயிரக்கணக்கான பிரதிகள்அச்சிட்டு விநியோகித்தார்.

இவ்வளவுக்கும் அவர் சொன்ன காரணம் இது தான். அதாவது, "70 காரணங்களால்காஃபிராகி விட்ட ஷாஹ் இஸ்மாயீலை ஏற்ற வஹ்ஹாபிகளையும் நத்வாவில்இணைத்ததால் எல்லா ஆலிம்களும் காஃபிராகி விட்டனர்''

ஆங்கிலேயரின் மனசாட்சி

இங்கு நன்கு கவனிக்க வேண்டும். ஷாஹ் இஸ்மாயீல் தெஹ்லவீ அவர்களுக்கும்,அவர்களது படைக்கும் வஹ்ஹாபிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்ததுஆங்கிலேயர்கள் தான். அதே பெயரை ரிளாகானும் பயன்படுத்துகின்றார்.

மேலும் இந்தியாவின் அனைத்து உலமாக்களும் சேர்ந்து ஆரம்பித்த நத்வத்துல் உலமாஅமைப்பை ரிளாகான் என்ற ஒரு தனிநபர் மட்டும் எதிர்த்து நூல் எழுதவும், அந்தஅமைப்பையே இல்லாமல் செய்யவும் முடிந்தது என்றால் ஆங்கிலேயருடன் அஹ்மதுரிளாகான் பரேலவிக்கு ஆங்கிலேயரின் மனசாட்சியாகச் செயல்படும் அளவுக்குத்தொடர்பு இருந்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நத்வத்துல் உலமா அமைப்பு மட்டும் துவங்கிய வீரியத்தோடு செயல்பட்டு இருந்தால்,இந்தியாவின் சரித்திரமே மாறி முஸ்லிம்கள் அசைக்க முடியாத சக்தியாக மாறிஇருப்பார்கள்.

ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் காலம் காலம் நஷ்டத்தை ஏற்படுத்திய இந்தஅஹ்மது ரிளாகான் பரேலவி முஸ்லிம்களின் எதிரி என்பதில் என்ன சந்தேகம் இருக்கமுடியும்?….

…இதே ரிளாகான் பரேலவி தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உலமாக்களும்முஸ்லிம்களும் போரிட்டு வீர மரணம் அடைந்து கொண்டிருந்த வேளையில், இந்தியாதாருஸ்ஸலாம் – இஸ்லாமிய நாடு தான்; முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்செய்யக் கூடாது என வலியுறுத்தினார். அதற்காக ஆங்கிலே யரைப் புகழ்ந்தும்,ஆங்கிலேயருக்கு எதிரான போரைக் கண்டித்தும் பல நூல்களை எழுதி ஆயிரக்கணக்கில்அச்சடித்து விநியோகித்தார்.

ஆங்கிலேயர்களுடன் போரிடுவது நம் கடமை என்று மார்க்கத் தீர்ப்பு கொடுத்தமௌலானா அப்துல் அஜீஸ் அவர்களையும் அன்னாரின் சீடர்களையும் இவர் காஃபிர் -இறை மறுப்பாளர் என்று ஃபத்வா கொடுத்தார்.

இப்போது சொல்லுங்கள். பரேலவிய்யத் ஆங்கிலப் பிள்ளையா? இல்லையா?

தனது ரிளாகான் என்ற பெயரை அப்துல் முஸ்தபா என்று மாற்றிக் கொண்டார்.

இத்தகைய தவறான கோட்பாடுகளையும், சிந்தனைûயும் கொண்ட இவராலும் இவரது சீடகோடிகளாலும் பரப்பப்பட்டதே பரேலவிய்யத் ரிளாகானிய்யத்.

இவர்களின் கொள்கைகளில் சில…

1. அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல் அவ்லியாக் களிடமும் கேட்கலாம்.

2. இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்யலாம்.

3. நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும் ஆஜராகின்றார்கள். அனைத்தையும்பார்க்கிறார்கள். (இறைவனுடன் பொருத்திப் பார்க்கும் அபாயகரமான நம்பிக்கை இது)

4. சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு ஆஜராகும் தன்மைகள் உள்ளன.

5. மறைவான ஞானம் (இல்முல்கைப்) நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.

6. தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மைதரும் செயல்களாகும்.

7. ஷைக் – ஞான குருவின் காலில் விழலாம். ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் -ஒப்பந்தம் செய்யலாம்.

குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் அனைத்திற்கும் புறம்பான இது போன்ற பல தவறானகொள்கைகளைப் பரப்பி இந்திய முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்றளவும் பல பிளவுஏற்படக் காரணமானவர் தான் அஹ்மது ரிளாகான் பரேலவி என்பதைப் புரிந்துகொள்வோம்.

ரிளாகான் பரேலவியின் இது போன்ற தீய கொள்கைகளைத் தாங்கி தற்போதுதமிழகத்திலும் புதிய அமைப்பு திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது. நாம் எச்சரிக்கையாகஇருப்போம்.

நன்றி: மனாருல் ஹுதா 
அக்டோபர் & நவம்பர் 2006

இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் களமிறங்க வேண்டும்.அவ்வாறு களமிறங்கிப் பிரச்சாரம் செய்தால், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும்இந்த பரேலவிகளை மக்களே அடையாளம் கண்டு விரட்டியடித்து விடுவார்கள்.இவர்களின் கொள்கைகளில் சில… என்று தலைப்பிட்டு மனாருல் ஹுதாவெளியிட்டிருக்கும் விஷயங்களைப் பாருங்கள்.

இந்த விஷக் கருத்துகளுக்கு எதிராகத் தான் இறையருளால் கால் நூற்றாண்டாக நாம்போராடி வருகின்றோம். மற்றவர்களைப் போல் இலை மறை காயாக, பட்டும் படாமலும்சொல்லாமல், "தயவு தாட்சண்யமின்றி எடுத்துச் சொல்லுங்கள்'' என்ற இறைக்கட்டளையின் அடிப்படையில் போட்டு உடைத்து வருகின்றோம்.

பரேலவியின் தீய கொள்கைகளைத் தாங்கி தற்போது தமிழகத்திலும் புதிய அமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது என்று மனாருல் ஹுதா எச்சரிக்கின்றது. ஆனால் அது யார்?என்று தெளிவாக அடையாளம் காட்ட அவர்கள் தயாராக இல்லை. இந்த மென்மையானபோக்கு தான் பரேலவிகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தான் அது என்று தெளிவாகச் சொல்வதற்குமனாருல் ஹுதாவிற்குத் தயக்கம் ஏன்?

பரேலவியின் கொள்கையை சுன்னத் வல் ஜமாஅத் என்ற போர்வையில் ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி வகையறாக்கள் தைரியமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்;அதற்கு ஆதரவாக தவ்ஹீது ஜமாஅத்துடன் விவாதக் களத்திற்கும் வருகின்றார்கள்என்றால் அதற்குக் காரணம் அவர்களைப் பற்றி மக்களிடம் தெளிவாக அடையாளம்காட்டி பிரச்சாரம் செய்யாதது தான்.

எனவே பரேலவிஸத்தைப் பற்றி கவலைப்படுவதோடு நின்று விடாமல் அதில் மக்கள்வீழ்ந்து நரகத்திற்குச் சென்று விடாமல் காக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளதுஎன்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அல்லாஹ் நம் அனை வருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

பரேலவிகளின் கொள்கைகளில் சில…

1. அல்லாஹ்விடம் தேவைகளைக் கேட்பதைப் போல் அவ்லியாக்களிடமும் கேட்கலாம்.

2. இறைநேசர்களின் அடக்கத் தலங்களில் ஸஜ்தா (சிர வணக்கம்) செய்யலாம்.

3. நபி (ஸல்) அவர்கள் எல்லா இடங்களிலும் ஆஜராகின்றார்கள். அனைத்தையும்பார்க்கிறார்கள். (இறைவனுடன் பொருத்திப் பார்க்கும் அபாயகரமான நம்பிக்கை இது)

4. சில இறைநேசர்களுக்கும் கூட இவ்வாறு ஆஜராகும் தன்மைகள் உள்ளன.

5. மறைவான ஞானம் (இல்முல் கைப்) நபியவர்களுக்கும் வலிமார்களுக்கும் உண்டு.

6. தர்ஹாக்களில் சந்தனக்கூடு, கொடியேற்றுதல், விளக்கேற்றுதல் போன்றவை நன்மைதரும் செயல்களாகும்.

7. ஷைக் – ஞான குருவின் காலில் விழலாம். ஷைக் பெண்களின் கை பிடித்து பைஅத் -ஒப்பந்தம் செய்யலாம்.

பரீட்சையில் தோற்கப் போகும் பரேலவிகள்

சாதாரணமாக உலகத்தில் ஒரு நிறுவனத்தில் ஒரு பணியாளரைச் சேர்க்கும் போதுஅந்நிறுவனம் அவருக்கு ஒரு பரீட்சை வைக்கின்றது. அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்அவரைப் பணியில் சேர்த்துக் கொள்கின்றது. தேர்வில் தோற்று விட்டால் அவரைஒதுக்கித் தள்ளி விடுகின்றது.

நிரந்தரமில்லாத இந்த நிறுவனத்திற்கு இப்படி ஒரு பரீட்சை எனில், நீடித்த வாழ்வைஅளிக்கும் நிரந்தர சுவனத்திற்கு அல்லாஹ் பரீட்சை வைக்காமல் விடுவானா? ஒருபோதும் விட மாட்டான். ஆனால் அந்தப் பரீட்சைக்கான தயாரிப்பை திருக்குர்ஆன் நமக்குஇந்த உலகத்தில் தந்து விடுகின்றது.

ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின்வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான் கள் விலங்கிடப்படுகின்றார்கள் என்றுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1899

ரமளான் மாதத்தை குர்ஆன் இறங்கியதற்காக அல்லாஹ் சிறப்பித்து உள்ளான். அந்தச்சிறப்பையொட்டி அல்லாஹ் சுவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றான்.இப்படிப் பட்ட சிறப்பைக் கொண்ட திருக் குர்ஆன், சுவனத்திற்கு வருவோருக்குஅல்லாஹ் வைக்கும் பரீட்சையின் விடையை சொல்லாமல் போய் விடுமா?

இந்தப் பரீட்சைக்கான வினாவையும் அதற்கு மார்க்கம் கூறும் விடையையும் இப்போதுபார்ப்போம்.

"அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?''என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேக மூட்டமில்லாது) வானம் தெளிவாகஇருக்கையில் சூரியனையும் சந்திரனையும் பார்க்க நீங்கள் (முண்டியடித்துக் கொண்டு)சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள். நாங்கள், "இல்லை'' என்று பதிலளித்தோம். "இவ்விரண்டையும் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே அந்த நாளில் உங்கள்இறைவனைக் காணவும் நீங்கள் சிரமப்பட மாட்டீர்கள்'' என்று கூறி விட்டு (பின்வருமாறு)விளக்கினார்கள்.

(மறுமை நாளில்) அழைப்பாளர் ஒருவர், "ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக்கொண்டிருந்த வர்களை பின்தொடர்ந்து செல்லட்டும்'' என்று அழைப்பு விடுப்பார்.அப்போது சிலுவை வணங்கிகள் தங்கள் சிலுவை களுடனும், சிலை வணங்கிகள் தங்கள்சிலைகளுடனும், ஒவ்வொரு  தெய்வ வழிபாட்டாளர்கள் தத்தமது கடவுள்களுடனும்செல்வார்கள். முடிவில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த நல்லவர்கள், அல்லது(அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு பாவங்கள் செய்து வந்த) பாவிகள், மேலும்வேதக்காரர்களில் மிஞ்சியவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். பின்னர் நரகம் கொண்டுவரப்பட்டு கானலைப் போன்று அவர்களுக்குக் காட்டப்படும். அப்போது யூதர்களிடம், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் உஸைரை வணங்கிக் கொண்டிருந்தோம்'' என்றுபதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய் உரைக்கிறீர்கள்.அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ இருக்கவில்லை'' என்று சொல்லப் படும். பிறகுஅவர்களிடம், "இப்போது நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்?'' என்று வினவப்படும்.அதற்கவர்கள், "எங்களுக்கு (குடிப்பதற்கு நீர்) புகட்டுவாயாக!'' என்று கேட்பார்கள்.அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு) "குடியுங்கள்'' என்றுகூறப்படும். (அதைக் குடிக்க முனையும் போது) அவர்கள் நரகத்தில் விழுந்து விடுவார்கள்.பின்னர் கிறித்தவர்களிடம், "நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்?'' என்றுகேட்கப்படும். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை நாங்கள் வணங்கிக்கொண்டிருந்தோம்'' என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்உரைக்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு மனைவியோ, மக்களோ இருக்கவில்லை'' என்றுசொல்லப் படும். பிறகு அவர்களிடம், "இப்போது நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்?'' என்றுவினவப்படும். அதற்கவர்கள், "நீ எங்களுக்கு (நீர்) புகட்டுவதையே விரும்புகிறோம்'' என்றுபதிலளிப்பார்கள். அப்போது (அவர்களிடம் கானலைப் போன்று நரகம் காட்டப்பட்டு) "குடியுங்கள்'' என்று கூறப்படும். (அதைக் குடிக்க முனையும் போது) அவர்கள் நரகத்தில்விழுந்து விடுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்த நல்லோர் அல்லது (அல்லாஹ்வைவணங்கிக் கொண்டிருந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடம், "மக்கள்(அனைவரும் தத்தமது தெய்வங்களின் பின்னால்) சென்று விட்டார்களே! நீங்கள் மட்டும்ஏன் இங்கேயே இருந்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "(உலகத்தில்) நாங்கள் இந்த மக்களிடம் அதிக தேவை உள்ளவர்களாக இருந்தும்(அவர்களுடன் ஒட்டி உறவாடாமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம். இங்கு ஓர்அழைப்பாளர், "ஒவ்வொரு சமுதாயத்தாரும் தாம் வணங்கிக் கொண்டிருந்தவர்களுடன்சேர்ந்து கொள்ளட்டும்' என்று அழைக்கக் கேட்டோம். நாங்கள் (வணங்கிக் கொண்டிருந்த)எங்கள் இறைவனை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று கூறுவார்கள்.

அப்போது சர்வ வல்லமை படைத்தவன், அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்ததோற்றம் அல்லாத வேறொரு தோற்றத்தில் வந்து, "நானே உங்கள் இறைவன்''என்றுகூறுவான். (உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயேஇருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் நாங்கள் அவனை அறிந்துகொள்வோம்'' என்று கூறுவர். அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில்அவர்களிடம் வந்து, "நானே உங்கள் இறைவன்'' என்பான்.) அதற்கு இறைநம்பிக்கையாளர்கள், "நீயே எங்கள் இறைவன்'' என்று சொல்வார்கள். அப்போதுஇறைவனிடம் இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேச மாட்டார்கள். அப்போது, "அவனை இனம் கண்டு கொள்ள ஏதேனும் அடையாளம் உண்டா?'' என்று (ஒருவர்)கேட்பார். அதற்கு இறை நம்பிக்கையாளர்கள், "கால் (பாதம்) தான்'' என்று கூறுவார்கள்.உடனே அல்லாஹ் தனது காலை வெளிப்படுத்துவான். இறை நம்பிக்கையாளர்கள்யாவரும் அவனுக்கு சிர வணக்கம் (ஸஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும்பாராட்டுக்காகவும் அல்லாஹ்வுக்கு சிரம் பணிந்து (தொழுது) கொண்டிருந்தவர்கள்மட்டுமே அப்போது எஞ்சியிருப்பார்கள். அவர்கள் சிர வணக்கம் செய்ய முற்படுவார்கள்.ஆனால் அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே பலகையைப் போன்று மாறிவிடும். (அவர்களால் சிர வணக்கம் செய்ய முடியாது). பிறகு பாலம் கொண்டு வரப்பட்டு,நரகத்தின் மேலே வைக்கப்படும்.

(இவ்வாறு நபியவர்கள் சொன்ன போது) நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அது என்னபாலம்?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அது (கால்கள்) வழுக்குமிடம்,சறுக்குமிடம். அதன் மீது இரும்புக் கொக்கிகளும் அகன்ற நீண்ட முற்களும் இருக்கும்.அந்த முட்கள் வளைந்திருக்கும். நஜ்த் பகுதியில் முளைக்கும் அவை கருவேல மரமுற்கள் எனப்படும்'' என்று சொல்லி விட்டு, தொடர்ந்து கூறினார்கள்.

இறை நம்பிக்கையாளர் அந்தப் பாலத்தை, கண் சிமிட்டலைப் போன்றும், மின்னலைப்போன்றும், காற்றைப் போன்றும், பந்தயக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களைப் போன்றும்(விரைவாகக்) கடந்து விடுவார். எந்தக் காயமும் இன்றி தப்பி விடுவோரும் உண்டு.காயத்துடன் தப்புவோரும் உண்டு. மூர்ச்சையாகி நரக நெருப்பில் விழுவோரும் உண்டு.இறுதியில் அவர்களில் கடைசி ஆள் கடுமையாக  இழுத்துச் செல்லப் படுவார்.

பின்னர் இறை நம்பிக்கை யாளர்கள், தாம் தப்பித்து விட்டோம் என்பதைக் காணும் போதுதம் சகோதரர்களுக்காக சர்வ அதிகாரமும் படைத்தவனிடம் அன்று அவர்கள் கடுமையாகமன்றாடுவார்கள். அந்த அளவிற்கு (இம்மையில்) உங்களுக்குத் தெளிவாகி விட்டஉரிமைக்காகக் கூட நீங்கள் என்னிடம் வலியுறுத்திக் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்போதுஅவர்கள், "எங்கள் இறைவா! (இவர்கள்) எங்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள்.எங்களுடன் நோன்பு நோற்றார்கள். எங்களுடன் நல்லறங்கள் புரிந்து கொண்டுஇருந்தார்கள். (எனவே இவர்களை நீ காப்பாற்றுவாயாக)'' என்று வேண்டுவார்கள்.

அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், "நீங்கள் சென்று எவருடைய உள்ளத்தில் ஒருபொற்காசு (தீனார்) அளவுக்கு இறை நம்பிக்கை இருக்கக் காண்கிறீர்களோ அவர்களை(நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்'' என்று கூறுவான். அவ்வாறே அவர்களும்(நரகவாசிகளிடம்) செல்வார்கள். அவர்களின் முகங்களைக் கரிக்கக் கூடாதெனஅல்லாஹ் நரகத்திற்குத் தடை விதித்து விடுவான். அப்போது (அந்த நரகவாசிகளில்)சிலர் தங்கள் பாதம் நரகத்திற்குள் மறையும் அளவிற்கு நரகினுள் கிடப்பார்கள். உடனேஅவர்கள் தமக்கு அறிமுகமானவர்களை (நரகிலிருந்து) வெளியேற்றுவார்கள். பிறகுமீண்டும் (இறைவனிடம்) செல்வார்கள். "எவரது உள்ளத்தில் பாதி பொற்காசு அளவுக்குஇறை நம்பிக்கை உள்ளதெனக் காண்கிறீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்''என்பான். அவர்கள் அவ்வாறே தமக்குத் தெரிந்தவர்களை வெளியேற்றி விட்டு மறுபடியும்(இறைவனிடம்) வருவார்கள். அப்போது அவன், "எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை இருக்கக் கண்டீர்களோ அவர்களையும் வெளியேற்றுங்கள்'' என்றுசொல்வான். அவ்வாறே அவர்கள் (வந்து) தமக்கு அறிமுகமானவர்களை (அதிலிருந்து)வெளியேற்றுவார்கள்.

இவ்வாறு இறைத்தூதர்கள், வானவர்கள், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோர்(தத்தமது) தகுதிக்கேற்ப பரிந்துரை செய்வார்கள். அப்போது சர்வ அதிகாரம் படைத்தவன், "(இனி) என் பரிந்துரை (மட்டுமே) எஞ்சியிருக்கின்றது'' என்று கூறி விட்டு, நரகத்திலிருந்துஒரு கைப்பிடி அளவு மக்களை அள்ளியெடுத்து அவர்களை வெளியேற்றுவான். அவர்கள்கரிந்து போயிருப்பார்கள். ஆகவே, சொர்க்க வாசலிலுள்ள ஒரு நதியில் அவர்கள்போடப்படுவார்கள். அதற்கு ஜீவ நீர் (மாவுல் ஹயாத்) என்று பெயர். உடனே அவர்கள்சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று நதியில் இரு மருங்கிலும்முளைத்து (நிறம் மாறி) விடுவார்கள். பாறையின் ஓரத்திலும் மரத்தின் ஓரத்திலும் இந்தப்பயிரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் வெயில் பக்கமாக இருப்பது பச்சையாகவும்,நிழல் பக்கமாக இருப்பது வெள்ளையாகவும் இருக்கும்.

ஆக, அவர்கள் (அந்த நதியிலிருந்து) வெளியேறும் போது முத்தைப் போன்று (புதுப்பொலிவுடன்) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (நரகத்திலிருந்து விடுதலைபெற்றவர்கள் என்பதற்கான) முத்திரை பதிக்கப்படும். பிறகு அவர்கள் சொர்க்கத்தினுள்நுழைவார்கள். அப்போது சொர்க்க வாசிகள், "இவர்கள் பேரருளாளனால் விடுதலைசெய்யப்பட்டவர்கள்! இவர்கள் எந்த நற்செயலும் செய்யாமல் எந்த நன்மையும் ஏற்கனவேசெய்திராமல் அவனே இவர்களை சொர்க்கத்தினுள் பிரவேசிக்கச் செய்தான்'' என்றுகூறுவர். பிறகு (அவர்களிடம்) "நீங்கள் காண்கிறீர்களே இதுவும் உங்களுக்கு உண்டு.இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கு உண்டு'' என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 7439

இந்த ஹதீஸின்படி அல்லாஹ் வைக்கும் தேர்வில் ஏகத்துவவாதிகள் மட்டுமே வெற்றிபெறுகின்றனர்; பரேலவிகள் தோற்று விடுகின்றனர்.

இந்த ஹதீஸ் ஒரு தெளிவான பாடத்தை உணர்த்துகின்றது. அல்லாஹ்வின்அடியார்களை, அவ்லியாக்களை அழைத்துப் பிரார்த்தித்த பரேலவிகள், சிலைவணங்கிகளைப் போன்று, யூதர்களைப் போன்று தங்கள் போலி தெய்வங்களுடன் போய்விடுகின்றார்கள். அவர்களைப் போல் இவர்களும் விசாரணைக்கு ஆளாகி நரகத்தில்வீழ்ந்து விடுகின்றார்கள். அதாவது அல்லாஹ் வைத்த அந்தப் பரீட்சையில் இவர்கள்வெற்றி பெறாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள்.

இவ்வாறு நாம் சொன்னவுடன் பரேலவிகள் உடனே, "நாங்கள் என்ன  ஈஸா, உஸைர்ஆகியோரைக் கூறியது போன்று அல்லாஹ்வுக்கு மகன் இருக்கின்றான் என்றுசொன்னோமா? அந்த மகனை அழைத்துப் பிரார்த்தித்தோமா? அல்லது சிலையைவணங்கினோமா? நாங்களும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வில்லையா?'' என்றுகேட்பார்கள். இங்கு தான் நாம் விரிவான பதிலைப் பார்த்தாக வேண்டும்.

இவர்கள் மிக முக்கியமான ஒன்றைக் கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். ஈஸாவைவணங்கியவர்களானாலும் சரி! உஸைரை வணங்கியவர்களானாலும் சரி! அல்லதுசிலைகளை வணங்கிய மக்கத்துக் காபிர்களும் சரி! ஏன்? நூஹ் நபி அவர்களின்காலத்திலிருந்து இன்று வரை உள்ள இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்குகள்) யாரும்அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற தெய்வங்களை வணங்கவில்லை.அல்லாஹ்வையும் வணங்கினர்; மற்ற தெய்வங்களையும் வணங்கினர்.

இதைப் பின்வரும் வசனங்களின் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

"எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு விட்டு, அல்லாஹ்வை மட்டும் நாங்கள்வணங்க வேண்டும் என்பதற்காக எங்களிடம் நீர் வந்திருக்கிறீரா? நீர் உண்மையாளராகஇருந்தால் எங்களுக்கு நீர் எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்'' என்று அவர்கள்கூறினர். (அல்குர்ஆன்7:70)

இவ்வாறு அல்லாஹ்வுடன் சேர்த்து மற்ற தெய்வங்களையும் வணங்கி வந்தஅவர்களுக்கு வேதனை ஏற்படும் போது அல்லாஹ்வை மட்டும் வணங்க முன்வந்தனர்.

அவர்களின் தூதர்கள் அவர் களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த போதுதம்மிடம் உள்ள கல்வியின் காரணமாக பெருமிதம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலிசெய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்கள் நமதுவேதனையைப் பார்த்த போது "அல்லாஹ்வை மட்டும் நம்பினோம். நாங்கள் எதைஇணையாகக் கருதினோமோ அதை மறுத்து விட்டோம்'' என்றனர். (அல்குர்ஆன் 40:38,39)

அதனால் தான் இப்ராஹீம் (அலை) அவர்கள், "உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றிஎதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களைமறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும்,உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' (அல்குர்ஆன் 60:4) என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள்.

மக்கத்து முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கை

மக்காவிலிருந்து முஷ்ரிக்குகளின் கடவுள் நம்பிக்கையை எடுத்துக் கொண்டால் இந்தபரேலவிகளின் கொள்கையை விட அழுத்த மானதாகவும் உயர்ந்ததாகவும்அமைந்திருந்தது. இந்த பரேலவிகளின் மனைவிமார்கள் பிரசவம், இன்னும் இது போன்றகடுமையான நேரங்களில் "யா முஹய்யித்தீன்'' என்று தான் பிராôத்திக்கின்றனர். ஆனால்மக்கத்து முஷ்ரிக்குகளோ "அல்லாஹ்வே'' என்று அழைத்துத் தான் பிரார்த்தித்தார்கள்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கேஉளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைகாப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன் 29:65)

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன்வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித்தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்டசதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

(அல்குர்ஆன் 31:32)

அபாய நேரத்தில் அபயம் அளிப்பது முஹய்யித்தீன் என்று கருதி இவர்கள்அழைக்கையில், அவர்களோ அபாய நேரத்தில் அபயமளிப்பவன் அல்லாஹ் தான் என்றுநம்பி அழைக்கின்றார்கள் என்றால் இந்த பரேலவிகளை விட அவர்கள் சிறந்தவர்கள்தானே!

படைப்பாளன் அல்லாஹ்

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்றுகூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

(அல்குர்ஆன் 43:87)

தங்களைப் படைத்தவன் அல்லாஹ் தான் என்பதை அம்மக்கள் அறிந்திருந்தனர்.

ஏழு வானங்களின் இறைவன்

"பூமியும் அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்)''என்று கேட்பீராக!  "அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவார்கள்.  "நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

"ஏழு வானங்களுக்கு அதிபதியும், மகத்தான அர்ஷுக்கு அதிபதியும் யார்?'' என்றுகேட்பீராக!  "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள்.  "நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?'' என்றுகேட்பீராக! "பாதுகாப்பவனும் (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும் தன் கைவசம்அனைத்துப் பொருட்களின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால்(பதில் கூறுங்கள்)'' என்று கேட்பீராக!  "அல்லாஹ்வே'' என்று கூறுவார்கள். "நீங்கள்எவ்வாறு மதிமயக்கப் படுகிறீர்கள்?'' என்று கேட்பீராக!  

(அல்குர்ஆன் 23:84-89)

இவை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் கொடுத்த வாக்கு மூலங்கள். அல்லாஹ்வின்மீது கொண்டிருந்த அழுத்தமான, ஆழமான நம்பிக்கைகள்.

அனைத்துப் பொருட்களின் ஆட்சியும் அவன் கைவசம் தான் என்று மட்டும் அம்மக்கள்நம்பிடவில்லை. அர்ஷின் நாயன் அவன் தான் என்பதையும் நம்பியிருந்தார்கள் என்பதைஇந்த வசனங்கள் விளக்குகின்றன.

விண்ணையும் மண்ணையும் படைத்தவன்

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால்"மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்'' எனக் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 43:9)

மழையைப் பொழிவிப்பவன் அல்லாஹ்

"வானங்களையும் பூமியையும் படைத்தவனும் சூரியனையும் சந்திரனையும் தன்கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ்என்று கூறுவார்கள்.  அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகின்றார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

வானங்களையும் பூமியையும் படைத்து, அதில் சுழல்கின்ற சூரியனைத் தன் கைவசம்வைத்திருப்பவன் அல்லாஹ் தான் என்ற நம்பிக்கை அந்த அரபக இணைவைப்பாளர்களிடம் இருந்தது.

அல்லாஹ்வின் மீது இந்த பரேலவிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை விட பலமானநம்பிக்கையை அம்மக்கள் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்தக் குர்ஆன் வசனங்கள்சான்றாகத் திகழ்கின்றன.

இப்படி அல்லாஹ்வைப் பற்றி நன்கு தெரிந்திருந்த மக்களுக்கு முஹம்மத் (ஸல்) என்றதூதர் அனுப்பப்பட வேண்டுமா? என்றால் நிச்சயமாகத் தேவையில்லை. அம்மக்களிடம்அல்லாஹ்வைப் பற்றி அறிமுகம் செய்து வைப்பதற்காக முஹம்மத் (ஸல்) அவர்கள்வரவில்லை. மாறாக அந்த மக்கள் அல்லாஹ்வுடன் மற்ற தெய்வங்களையும்கூட்டாக்கிக் கொண்டனர். அதாவது அந்தத் தெய்வங்கள் அல்லாஹ்விடம் சிபாரிசுசெய்வார்கள்; நெருக்கி வைப்பார்கள் என்று கூறினார்கள். இங்கு தான் அரபகமுஷ்ரிக்குகளின் கொள்கையும் பரேலவிகள் கொள்கையும் ஒத்துப் போகின்றது.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றைவணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்''என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததைஅவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதைவிட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றிபாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும்நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்றுகூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ்தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

மக்கத்து முஷ்ரிக்குகள் என்ன வாதத்தை எடுத்து வைத்தார்களோ அதே வாதத்தைத் தான்இந்த பரேலவிகள் எடுத்து வைக்கின்றனர்.

நாங்கள் என்ன அவ்லியாக்களை அழைத்தா பிரார்த்திக்கிறோம்? அவர்கள் எங்களுக்குச்சிபாரிசு செய்வார்கள் என்று தானே கூறுகிறோம்! நாமெல்லாம் பாவிகள்! அதனால்அல்லாஹ்வை நெருங்க முடியாது. அதனால் இவர்கள் மூலம் சீக்கிரம் நெருங்கிவிடலாம் என்று பரேலவிகள் வாதிடுகின்றனர்.

இது புதிய வாதமல்ல! மக்கத்து முஷ்ரிக்குகள் வைத்த வாதம் தான் என்பதை மேற்கண்டவசனங் களிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இறந்து விட்ட அவ்லியாக்கள் செவியுறுகின்றனர்; பதிலளிக்கின்றனர் என்று மிகத்தெளிவாக இந்த பரேலவிகள் சொல்கின்றனர். இதுவும் மக்கத்து முஷ்ரிக்குகளின்நம்பிக்கை தான். அதற்குத் தான் அல்லாஹுத் தஆலா தனது திருமறையில்பதிலளிக்கின்றான்.

இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ளமாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப்பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும்உங்களைப் பொறுத்த வரை சமமானது.  அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரைஅழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள்உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள்உங்களுக்குப் பதில் தரட்டும்!

"அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா?அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா?உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்தஅவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!"இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வேஎனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான்'' (என்றும்கூறுவீராக!) அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்குஉதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(அல்குர்ஆன் 7:192-197)

மக்கத்து முஷ்ரிக்குகளின் நம்பிக்கைக்கு இந்த வசனங்களில் இறைவன் பதிலளித்துஅவர்களை வாயடைக்கச் செய்கிறான்.

சிலைகள் என்ற செத்த வாதம்

அவ்லியாக்களை அழைத்துப் பிரார்த்திக்கக் கூடாது என்பதற்கு நாம் இந்த வசனங்களைபரேலவிகளிடம் எடுத்து வைக்கும் போது, இவையெல்லாம் சிலைகள் சம்பந்தப் பட்டவசனங்கள் என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடுகின்றனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்றஅடிமைகளே! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்!அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (அல்குர்ஆன் 7:194)

"உங்களைப் போன்ற அடியார்கள்'' என்ற இந்த வார்த்தை ஒரு போதும் கல், களி மண்,பொன், வெள்ளி மற்றும் மெழுகுச் சிலைகளைக் குறிக்காது. மனிதர்களைத் தான்குறிக்கும் என்ற உண்மைகளைத் தெரிந்தே ஒத்துக் கொள்ள மறுக்கின்றனர். அதற்கும்அல்லாஹ் பின்வரும் வசனங்களில் சரியான அடி கொடுக்கின்றான்.

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்கமாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்’என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:20,21)

இறந்தவர்கள், உயிர் இல்லாதவர்கள், எப்போது எழுப்பப் படுவார்கள் என்ற இந்தவார்த்தை அமைப்புகள் உயர்திணையைக் குறிப்பவை.

சிலைகளைக் குறிப்பவையாக இருந்தால் உயிரில்லாதது என்று அஃறிணையாகக்குறிப்பிட வேண்டும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் உயர்திணையாகக்கூறப்பட்டுள்ளது. எனவே தெளிவாக, இறந்து விட்ட நல்லடியார்களைத் தான் இந்தவசனங்கள் குறிப்பிடுகின்றன.

எனவே சிலைகள் என்ற  பரேலவிகளின் வாதம் செத்து மடிந்து விடுகின்றது.

மேலும் மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கியது சிலைகளை என்றாலும் சிலைகளுக்குரியபாத்திரங்களைத் தான் வணங்கினார்கள்.

நபிமார்களின் சிலைகள்

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளேநுழைய மறுத்து, அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவைஅப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில்தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும்இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! இவ்விருவரும் அம்புகள் மூலமாககுறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள்அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறி விட்டு கஅபாவில் நுழைந்தார்கள். அதன்ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள். அதில் தொழவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1601

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் நுழைந்த போது, இப்ராஹீம் (அலை),இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் சிலைகள் இருந்தன என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம்(அலை) அவர்களின் உருவப் படத்தையும், மர்யம் (அலை) அவர்களின் உருவப்படத்தையும் கண்டார்கள். உடனே, "உருவம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்பதை இந்தக் குறைஷிகள் கேள்விப்பட்டு இருக்கிறார்களே! இதுஇப்ராஹீமின் உருவம். குறி சொல்பவராக நிற்கிறாரே! (குறி சொல்வதற்கும்)அவருக்கு(ம்) என்ன (சம்பந்தம்)?'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3351

மர்யம் (அலை) அவர்களின் சிலையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸ்தெரிவிக்கின்றது.

எனவே மக்கத்து முஷ்ரிக்குகள் வணங்கியது சிலைகளை அல்ல! அந்தப் பாத்திரங்களை,அதாவது நபிமார்கள், மர்யம் (அலை) போன்றோரைத் தான் என்பது நன்றாகவிளங்குகின்றது.

இந்தப் பெரியார்களைத் தான் அல்லாஹ்வுடன் கூட்டாக்கி வணங்கினர்.

எப்போது இந்தப் பெரியார்களை அழைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்து விடுகின்றார்களோஅப்போதே தன்னை மட்டும் அழைப்பவர்களின் பட்டியலிலிருந்து அல்லாஹ் அவர்களைநீக்கி விடுகின்றான். தன்னிடம் கேட்க வேண்டியதை தன்னுடைய அடியார்களிடம் கேட்கஆரம்பித்ததும் அல்லாஹ் கடுமையாகக் கோபம் கொள்கின்றான். தன்னிடம்பிரார்த்திக்காதவர்களின் பட்டியலில் அவர்களைச் சேர்த்து விட்டு, அவர்களது மரணவேளையில் "எங்கே அந்தப் பெரியார்கள்?'' என்று கேட்கிறான்.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனதுவசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். "அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?'' என்று நமதுதூதர்கள் அவர்களைக் கைப்பற்ற அவர்களிடம் வரும் போது கேட்பார்கள். "அவர்கள்எங்களை விட்டும் மறைந்து விட்டனர்'' என அவர்கள் கூறுவார்கள். "நாங்கள் (ஏகஇறைவனை) மறுப்போராக இருந்தோம்'' என தமக்கு எதிராக சாட்சி கூறுவர்.

(அல்குர்ஆன் 7:37)

எனவே அல்லாஹ்வையும் சேர்த்து இவர்கள் வணங்கியது இவர்களுக்குப் பயனளிக்காதுபோய் விடுகின்றது.

அல்லாஹ்வுடன் பெரியார்களையும் கூட்டாக்கி அழைக்கும் இவர்களின் இந்தக் கூட்டைஉடைத்து அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் முஹம்மதுநபி (ஸல்) அவர்கள் தூதராக அனுப்பப்பட்டார்கள்.

மக்கத்து முஷ்ரிக்குகளுக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் நடந்தபோராட்டமே இதை ஒட்டித் தான்.

குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டிஓடுகின்றனர்.

(அல்குர்ஆன் 17:46)

இறைச் செய்தி வரும் வரை மதித்து, அன்பு செலுத்திக் கொண்டிருந்த முஹம்மத் (ஸல்)அவர்கள் மீது மக்கத்து முஷ்ரிக்குகள் வெறுப்பு கொள்ளக் காரணம் அல்லாஹ்வைமட்டும் தனித்து வணங்க வேண்டும் என்று சொன்னது தான்.

முகத்தில் சிரிப்பு அகத்தில் நெருப்பு

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கிவிடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

(அல்குர்ஆன்39:45)

மக்கத்து முஷ்ரிக்குகள் மகிழ்ச்சி தொலைந்து போனதற்குக் காரணமே நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்று சொன்னதால் தான். இதைஉடைத்துத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெற்றி கண்டார்கள். மக்கத்துமுஷ்ரிக்குகளின் அந்தக் கொள்கை இன்று இஸ்லாத்திற்குள் பரேலவிஸம் என்றபெயரில் பயங்கர விஷமாக நுழைந்து விட்டது.

பரேலவிகளுக்கும் நமக்கும் இடையே நடக்கும் போராட்டமும் அது தான். மேற்கண்டவசனத்தில் கூறப்படுவது போல் அல்லாஹ் என்று சொல்லும் போது இவர்களதுமுகங்கள் சுருங்கி விடுகின்றன. ஆனால் அதே சமயம் முஹய்யித்தீன் அப்துல் காதிர்ஜீலானி என்று சொல்லும் போது, அகங்கள் குளிர்ந்து விடுகின்றன; முகங்கள்ஜொலிக்கின்றன. கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் என்று வாய்கள் கூறுகின்றன.

மேற்கண்ட வசனத்தில் உள்ள தன்மைகளை அப்படியே இவர்களிடம் பார்க்கிறோம்.எனவே இவர்கள் இந்த அடிப்படையிலும் மக்கத்து முஷ்ரிக்குகளுக்கு அப்படியே நூறுசதவிகிதம் ஒத்திருக்கின்றனர்.

மக்கத்து முஷ்ரிக்குகள் போன்ற இவர்கள் அல்லாஹ்வை வணங்கியது பயனளிக்காதவகையில் ஆகி விடுகின்றது. அதனால் மறுமையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர்ஜீலானி அவர்களது உருவம் போலி தெய்வமாகக் காட்டப்பட்டு அதனுடன் சேர்ந்து நரகப்படுகுழியில் இவர்களும் வீழ்ந்து விடுவர். இவர்கள் மறுமையில் அல்லாஹ் வைக்கும்பரீட்சையில் தோற்று விடுவார்கள். ஏகத்துவவாதிகள் நஜாத் (பாஸ்) ஆகி விடுகின்றனர்.

இவர்கள் எல்லாம் தங்கள் தெய்வங்களுக்குப் பின்னால் செல்லும் போதுஏகத்துவவாதிகள் அவர்களைத் தொடர்ந்து செல்லவில்லை.

"(உலகத்தில்) நாங்கள் இந்த மக்களிடம் அதிக தேவை உள்ளவர்களாக இருந்தும்(அவர்களுடன் ஒட்டி உறவாடாமல்) அவர்களைப் பிரிந்திருந்தோம்'' என்று கூறி மறுத்துவிடுகின்றார்கள்.

புறக்கணிப்பும் பூரண பலனும்

இதன் காரணமாகத் தான் இன்று இவர்கள் பின்னால் நின்று நாம் தொழுவதில்லை.

இவர்கள் குடும்பத்தில் சம்பந்தம் வேண்டாம் என்கிறோம்.

இவர்களது கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்கிறோம்.

அதாவது இப்ராஹீம் (அலை) அவர்கள் அனுசரித்த அந்தப் புறக்கணிப்பை அப்படியேஎடுத்து நடக்கிறோம். அதன் பயனாக ஏகத்துவவாதிகளாகிய நாம் இன்ஷா அல்லாஹ்மறுமையில் இவர்களுக்குப் பின்னால் செல்லாதிருப்போம். இது புறக்கணிப்பின்காரணமாகக் கிடைக்கும் பூரண பலனாகும்.

இந்தப் பரீட்சைக்குப் பின்னாலும் இன்னொரு பரீட்சை உண்டு. அது தான் அல்லாஹ் தன்கெண்டைக் காலை வெளிப்படுத்துவதாகும். அதிலும் இறையருளால் ஏகத்துவவாதிகள்வெற்றி பெற்று விடுகின்றனர்.

அதற்கு அடுத்து பாலத்தைத் தாண்டுதல். இதிலும் ஏகத்துவவாதிகள் வெற்றிபெறுகின்றனர். இந்தப் பரீட்சைகளுக்கு எல்லாம் முந்தி, முதன் முதலில் உள்ள பரீட்சைகப்ரில் உள்ள பரீட்சையாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கப்ரில் ஒரு முஃமின் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு மலக்குகளைக்)கொண்டு வரப்(பட்டு கேள்வி கேட்கப்)படும். பிறகு அந்த முஃமின், "வணக்கத்திற்குஉரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள்அவனது தூதராவார்கள்'' என்று சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ், "நம்பிக்கைகொண்டோரை உறுதியான சொல்லின் மூலம் இவ்வுலக வாழ்க்கையிலும்,மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான்'' (14:27) எனக் குறிப்பிடுகின்றான்.

அறிவிப்பவர்: பராஃ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 1369, 4699

இதிலும் ஏகத்துவவாதிகள் அல்லாஹ்வின் உறுதியான வார்த்தையைக் கொண்டு உறுதிப்படுத்தப்படுகின்றார்கள்.

ஆக, ஏகத்துவவாதிகள் இந்த முதல் பரீட்சையில் வெற்றி பெற்ற பின் மறுமையில்நடக்கும் இரண்டாவது பரீட்சையிலும் வெற்றி பெறுகின்றார்கள். பரேலவிகள் இங்கும்தோற்று, அங்கு தோற்று விடுகின்றார்கள்.

எனவே பரேலவிகளின் கொள்கைக்கு மக்கள் பலியாகி விடாமல் பாதுகாப்பது ஏகத்துவவாதிகளின் தலையாய கடமையாகும். அந்தப் பணியை என்றும் தொடர்வோமாக!