அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள்

ஏகத்துவம் டிசம்பர் 2006

அல்குர்ஆன் ஓதுகையில் அழுகின்ற கண்கள்

ரமளான் மாதம் வந்தது! முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்மாதத்தில்குர்ஆனுடன் நமக்கு ஒரு தொடர்பு கிடைத்தது. அதிகமதிகம் அல்குர்ஆன் ஓதினோம்;ஓதக் கேட்டோம்.ஆனால் நாம் அழவில்லை. அல்குர்ஆன் ஓதினால் அழ வேண்டுமா?ஏன்? இதோ அல்லாஹ் கூறுகின்றான் பாருங்கள்!

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போதுஉண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர்காண்பீர். "எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்றுகூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 5:83)

அவர்கள் அழுது முகம் குப்புற விழுகின்றனர். அது அவர்களுக்கு அடக்கத்தைஅதிகமாக்குகிறது.

(அல்குர்ஆன் 17:109)

அவர்கள் செய்து கொண்டு இருந்ததன் காரணமாக அவர்கள் குறைவாகவேசிரிக்கட்டும்!அதிக மாக அழட்டும்!

(அல்குர்ஆன் 9:82)

தன்னை ஓதும் போது கண்கள் குளமாவதை திருக்குர்ஆன் எதிர்பார்க்கிறது. இப்படிப்பட்டநிலைக்கு நாம் நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளங்கள் நடு நடுங்கவேண்டும். ஏனெனில் அல்லாஹ் இதை இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகச் சுட்டிக்காட்டுகின்றான்.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கிவிடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்கி அடைகின்றனர்.

(அல்குர்ஆன்39:45)

இந்த வசனத்தைச் சுட்டிக் காட்டி, "அவ்லியாக்களின் பெயரைச் சொன்னால் ஆனந்தப்பரவசம் அடைகிறார்கள்” என்று குôரபிகளை விமர்சனம் செய்கின்றோம்.

ஆனால் கீழ்க்கண்ட வசனங்களின் அடிப்படையில் அல்லாஹ் கூறுகின்ற தன்மைகள்நம்மிடம் உள்ளனவா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின்உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அதுஅவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையேசார்ந்திருப்பார்கள்.

(அல்குர்ஆன் 8:2)

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப் பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும்.தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையைநிலை நாட்டுவர். நாம்அவர்களுக்கு வழங்கிய திலிருந்து (நல் வழியில்) செலவிடுவர். (அல்குர்ஆன் 22:35)

குர்ஆனை ஓதும் போது ஈமான் அதிகரிக்க வேண்டும்; அந்த ஈமான் அதிகரித்ததற்குஅடையாளம் நமது கண்கள் நனைவதாகும்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "எனக்கு (குர்ஆனை) ஓதிக் காட்டுங்கள்” என்றுசொன்னார்கள். நான், "உங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்க தங்களுக்கேநான் ஓதிக் காட்டுவதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஏனெனில் நான்பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று சொன்னார்கள். ஆகவே நான்அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். "(முஹம்மதே!) ஒவ்வொருசமுதாயத்திற்கும் சாட்சியை நாம் கொண்டு வந்து, இவர்களுக்கு எதிராக உம்மைச்சாட்சியாக நாம் கொண்டு வரும் போது (இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?” எனும்(4:41வது) வசனத்தை நான் அடைந்த போது நபி (ஸல்) அவர்கள் "நிறுத்துங்கள்” என்றுசொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4582

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணீர் வடிப்பதை நாம் இங்கு பார்க்கிறோம்.நபியவர்களைப் போன்று தான் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்குர்ஆன் வசனங்களில்ஈடுபாடு கொண்டு கண்ணீர் வடிப்பார்கள். இதன் காரணமாகவே நபி (ஸல்) அவர்களின்மரண வேளையின் போது, அபூபக்ர் (ரலி)யைத் தொழுவிக்கும்படி ஏவுகையில் ஆயிஷா(ரலி) மறுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது. "மக்களுக்குத் தொழுகை நடத்தும் படிஅபூபக்ரிடம் கூறுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு, "அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்றுதொழுகை நடத்துவார்களானால் அவர்கள் அழுவதன் காரணத்தால் மக்களுக்குக்குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத்தொழுவிக்கட்டும்” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும் "அபூபக்ர் (ரலி) உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர்அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவேதொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள்” என்று நபி (ஸல்)அவர்களிடம்கூறும் படி ஹஃப்ஸா (ரலி) இடம் கூறினேன்.

அவர்களிடம் கூறிய போது. "நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக்கண்டு கையை அறுத்த) பெண்கள் கூட்டத்தைப் போன்றவர்கள். மக்களுக்குத் தொழுகைநடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போதுஹஃப்ஸா (ரலி) என்னிடம் "உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 716

அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்த காலத்தில் அவர்களது அழுகை மக்கத்துக்காஃபிர்களை அலறவும், அதிரவும் வைத்தது.

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

என் பெற்றோர் அபூபக்ரும், உம்முரூமானும் எனக்கு விவரம் தெரிந்தது முதல்இஸ்லாத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின்இரண்டு ஓரங்களானகாலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகைதராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. மக்காவில் முஸ்லிம்கள்சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அபிசீனிய நாட்டை நோக்கி நாடுதுறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் எமன்செல்லும் வழியில் "பர்குல் கிமாத்’என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார்.அவர் அல்காராஎனும் குலத்தின் தலைவராவார். அவர், "அபூபக்ரே எங்கே செல்கிறீர்கள்”என்று கேட்டார். "என் சமுதாயத்தினர் என்னை நாட்டை விட்டு வெளியே செல்லும்நிலைக்குத் தள்ளி விட்டனர். ஆகவே நான் பூமியில் பரவலாக பயணம் செய்துநிம்மதியாக என் இறைவனை வணங்கப் போகிறேன்” என்று அபூபக்ர் (ரலி)பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃகினா, "அபூபக்ரே தங்களைப் போன்றவர்கள்நாட்டை விட்டு தாமாகவும் வெளியேறக் கூடாது, மற்றவர்களால் வெறியேற்றப் படவும்கூடாது. ஏனெனில் நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கின்றீர்கள். இரத்த பந்த உறவுகளைப்பேணி நடந்து கொள்கிறீர்கள். கஷ்டப் படுவோரின் பாரத்தைச் சுமக்கிறீர்கள்.விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவிபுரிகின்றீர்கள்” என்று புகழ்ந்து கூறினார். பின்னர் "தங்களுக்கு நான் அடைக்கலம்தருகிறேன். நீங்கள் மக்காவிற்குத் திரும்பிச் சென்று உங்களது சொந்த ஊரிலேயேஇறைவனை வணங்குங்கள்” என்று கூறினார்.

இதைக் கேட்ட அபூபக்ர்(ரலி) தமதுஅபிசீனிய பயணத்தை ரத்துச் செய்து விட்டுமக்காவிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃகினாவும் மக்காவிற்குத்திரும்பினார். அன்று மாலை இப்னு தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைச் சந்தித்துஅவர்களிடம், "அபூபக்ரைப் போன்றவர்கள் மக்காவிலிருந்து தாமாக வெளியேறுவதோ,அல்லது பிறரால் வெளியேற்றப் படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கக் கூடிய,உறவுகளைப் பேணி, சிரமப்படுவோரின் பாரங்களைச் சுமந்து, விருந்தினர்களைஉபசரித்து சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி வரும் ஓர் ஒப்பற்றமனிதரையாநாடு துறந்து வெளியேறிச் செல்லும் நிலைக்கு நீங்கள் உள்ளாக்குகிறீர்கள்”என்று கேட்டார்.

அபூபக்ர் (ரலி) க்கு இப்னு தஃகினா அடைக்கலம் தருவதாகக் கூறியதைகுரைஷிகள்மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, "அபூபக்ர் தமதுஇல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ தொழவோ தாம் விரும்பியதைஓதவோ செய்யட்டும். ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோஇவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் இவரதுவணக்க வழிபாடுகளைப் பார்த்து, குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள்அஞ்சுகிறோம் என்பதை அவரிடம் கூறிவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அதன்படி அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமதுதொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியேஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்றுயோசனைதோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில்தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி) யைப் பார்த்துஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர்.அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போதுதமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல்அதிகமாக அழக் வர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகியமனம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்துவிடுமோ என்ற அச்சம்இணைவைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது.

அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆள் அனுப்பினார்கள். அவர் குரைஷிகளிடம் வந்தார்.அப்போது அவர்கள், "அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே அவருடைய இறைவனைவழிபட்டுக் கொள்ளட்டும் என்ற நிபந்தனையோடு நீங்கள் அடைக்கலம் தந்தீர்கள்.அதனால் தான் அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளித்தோம். அதை அவர் மீறி விட்டுதமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத்தொழுது கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்கிறார். எங்கள் மனைவி மக்கள்குழப்பத்திற்கு உள்ளாகி விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்.எனவேஅபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் தனது வீட்டில் தனதுஇறைவனைவணங்குவதோடு நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதைமறுத்து பகிரங்கப்படுத்துவேன் என்றால் அவரிடம் உங்களது அடைக்கலப் பொறுப்பைதிரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனென்றால் உங்களது உடன்பாட்டை முறித்துஉங்களுக்கு மோசடி செய்வதைநாங்கள் வெறுக்கிறோம். அதே சமயம் அபூபக்ர் இவ்வாறுபகிரங்கமாகச் செய்வதையும் எங்களால் அனுமதிக்க முடியாது” என்று கூறினார்கள்.

இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, "நான் எந்த நிபந்தனையின் பேரில்உங்களிடம்ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று அதோடு மட்டும்நிறுத்திக் கொள்ளுங்கள்! அல்லது எனது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தந்துவிடுங்கள். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதர் விஷயத்தில்ஏமாற்றப்பட்டு விட்டேன்என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பவில்லை”என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) உமது அடைக்கலத்தை "உம்மிடமே திரும்பத்தந்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2297

இப்படி குர்ஆன் ஓதும் போது அடக்க முடியாத அளவுக்கு அழுபவர்களாகஅபூபக்ர் (ரலி)இருந்துள்ளனர்.

இது போன்று ஏனைய நபித் தோழர்களும் அழுதுள்ளனர்.

"(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும்தெளிவான சான்று அவர்களிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்….”எனும் (திருக்குர்ஆனின் 98வது) அத்தியாயத்தை உங்களுக்கு ஓதிக் காட்டும்படிஅல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள், உபை பின் கஅப்(ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், "என் பெயரைக்குறிப்பிட்டா கூறினான்?” என்று கேட்க, நபி (ஸல்)அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அழுதார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 3809

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சொற்பொழிவுகளும் நபித்தோழர்களை அழவைத்துள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர்உரையை நான் ஒரு போதும் கேட்டதில்லை. அவர்கள், "நான் அறிகின்றவற்றை நீங்கள்அறிந்தால் நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமான அழுவீர்கள்” என்று கூறினார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதருடைய தோழர்கள் தம்முகங்களை மூடிக் கொண்டுசப்தமிட்டு அழுதார்கள்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4621

இறைவனை நினைத்து, தனிமையில் அழுபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தன்அர்ஷின் நிழலில் நிற்கும் பாக்கியத்தைப் பரிசாக அளிக்கின்றான்.

"அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறுநிழலே இல்லாத மறுமை நாளில் ஏழுபேருக்குஅல்லாஹ் தனது நிழலின் மூலம் நிழலளிப்பான். 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறைவணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துகண்ணீர் சிந்திய மனிதன். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும்உள்ளம் உடையவர்.5. இறை வழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும், அழகும்உடையஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும், "நான் அல்லாஹ்வுக்குஅஞ்சுகின்றேன்” என்று கூறியவர். 7. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம் கூடஅறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்” என்றுநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6806

எனவே இப்படிப்பட்ட தன்மையைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.அதிலும் குறிப்பாக குர்ஆன் ஓதும் போது நமக்கு அழுகை வரவேண்டும் என்றால் அதன்அர்த்தம்நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

குர்ஆனைப் பொருள் தெரிந்து ஓத ஆரம்பித்தால் அதுவே நம்முடைய உள்ளத்தைஉருகவும், கண்களில் கண்ணீரைப் பெருகவும் செய்து விடும். எனவே குர்ஆன்விரும்புகின்ற இந்தஅழகிய பண்புகளைப் பெறுகின்ற நல்லடியார்களாக நாமும் ஆகமுயற்சிப்போமாக!