தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?
கே.எம். அப்துன்னாஸிர், கடையநல்லூர்

ஏகத்துவம் அக்டோபர் 2005

மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார்மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும்.

குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்கவேண்டும்.

நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால் நாங்கள் தான் கொள்கை வாதிகள் என்றும் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றி வருபவர்கள்என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத் துவங்கிவிட்டது. ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கூட இவர்களைத்தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துகளும் இவற்றைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

மார்க்க விஷயங்களில் திருமறைக் குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும்தான் கட்டுப்பட வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தவர்கள் ஒரு தனி நபரின் மீதுஏற்பட்ட பொறாமையின் காரணமாக “உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்படவேண்டும்” எனும் மார்க்கத்திற்கு புறம்பான புதுக் கொள்கையைப் புகுத்தினார்கள்.

குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்தவர்கள் குர்ஆனும், நபிவழியும் தங்களுடைய கருத்துக்கு தோதுவாக அமையாத காரணத்தினால்”ஸஹாபாக்களுடைய கருத்துகளையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றுதிருக்குர்ஆனிலும், நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச்சென்றார்கள்.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத் தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்றஅடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனி நபரின் மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாகஇன்றைக்கு பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் நிலைக்குச்சென்று விட்டனர்.

கொள்கையற்றவர்களையெல்லாம் தன்னுடைய உறவினர் என்பதற்காக தங்களுடைய”பிர்தவ்சியா மதரஸா’ நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்து “உமறுப் புலவர் கனவில் நபிகள் நாயகம்வந்தார்கள்” என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள் தான்இவர்கள்.

குர்ஆன், ஹதீஸ் அனைவருக்கும் விளங்கும் என்று நாம் கூறி வருவதால் “குர்ஆன், ஹதீஸ்யாருக்கும் விளங்காது; அறுபத்தி நான்கு கலைகளையும் படித்து, மதீனாவில் பட்டம் பெற்று, உலக அமீராக இருப்பவர் கூறினால் தான் விளங்க முடியும்” என்றும் இவர்கள் கூறுவார்கள்என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் இவர்களின் தொடர் மனமாற்றம் இதைத்தெளிவுபடுத்துகிறது.

இது இவர்களிடம் ஏற்பட்ட தடுமாற்றமா? இல்லை கொள்கை மாற்றமா? என்று தான்தெரியவில்லை.

ஆண்கள் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள்யாவை? என்பதைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஏகத்துவம் இதழில் வெளியிடப் பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு எழுதப் போகிறோம் என்று புறப்பட்ட சிலர் மறுப்பு என்ற பெயரில் தங்கள்அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆண்கள் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று அபூஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்; ஆனால்இன்னும் பல அறிஞர்கள் இதைவிடக் குறைந்த அளவிற்கு மறைத்துக் கொண்டால் போதுமானதுஎன்று கூறியுள்ளனர்; முதல் சாரார் எடுத்து வைக்கக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை; நபி(ஸல்) அவர்களுக்குப் பல நேரங்களில் தொடை தெரிந்துள்ளது என்பதற்கு வலுவான பலசான்றுகளைக் காட்டி தொழுகையின் போது ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில்ஆடையணிந்து தொழுதால் அது குற்றமில்லை என்று தெளிவாக ஆய்வுக்கட்டுரை ஏகத்துவம்இதழில் எழுதப்பட்டிருந்து.

இதற்கு மறுப்பு எழுதக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும்? தொப்புளிலிருந்து முட்டுக்கால்வரை மறைப்பதற்கு சரியான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். அல்லது நாம் பலவீனம்என்று கூறியது இன்னின்ன காரணங்களால் தவறு எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

ஆனால் குராபிகளைப் போல் “அன்றைக்கு இதை ஸஹீஹ் என்று கூறிவிட்டு இன்றைக்கு”ளயீஃப்” என்று கூறுகிறீர்களே அன்று இருந்த ஹதீஸ்கள் தான் இன்றும் இருக்கின்றன. ஹதீஸ்களில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் 2005ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்எப்படி உதயமானது?” என்று உளறியுள்ளனர். சில ஆய்வாளர்கள் வயதான காலத்தில் “தல்கீன்” சொன்னதை அப்படியே சிந்திக்காமல் கூறுவார்கள். இந்த மறுப்பாளர் அந்நிலைக்கு வந்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வை எந்த அளவிற்குவிகாரமாக்க முடியுமோ அந்த அளவிற்கு விகாரமாகக் கூறியுள்ளனர். தொடைப் பகுதி கட்டாயம்மறைக்க வேண்டிய உறுப்புகளில் அடங்காது என்று நாம் கூறிய பிறகும் அதற்கு தெளிவானசான்றைக் காட்டாமல் அதற்குத் தொடர்பில்லாத சில வசனங்களைக் கூறி “இந்த வசனங்கள்மூலம் ஒரு மனிதன் தனது மானத்தை மறைப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்பதையும் மனிதர்கள் மானக் கேடானது என்று வெறுக்கக் கூடியவற்றை அல்லாஹ்வும்வெறுக்கிறான் என்பதையும் புரிய முடிகிறது” என்று கூறியுள்ளனர்.

“தொழுகையின் போது ஒரு அளவு, தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணிய வேண்டும்என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு (தொடை தெரியும் வகையில்) ஆடை அணிந்து விட்டுதொழுகைக்கு இது பொருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி நியாயமாக இருக்கும். அப்படிநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அப்படி வித்தியாசப்படுத்தும் எந்தஆதாரமும் கிடைக்காத போது இக்கேள்வி அர்த்தமற்றதாகிவிடுகிறது” என்று ஏகத்துவத்தில்குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு பதில் கூறமால்

“நபி (ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முக்கால் தொடையும் தெரிவது மாதிரிதொழுகையில் இமாமாக நின்று தொழுதார்கள் அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்குஒரு சான்றையாவது கொண்டு வர முடியுமா?” என்று கேட்டுள்ளனர்.

ஒரு விஷயத்தைக் கூடாது என்று மறுப்பவர்கள் தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். இந்த அடிப்படையைக் கூட இவர்கள் மறந்து விட்டனர். மேலும் நபியவர்கள் செய்திருந்தால் தான்ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவது அறியாமையாகும். அவர்கள் அங்கீகரித்துஇருந்தாலும் அதுவும் மார்க்கச் சட்டம் தான்.

நபி (ஸல்) அவர்கள் உடும்புக்கறி சாப்பிட்டதில்லை. ஆனால் அதற்கு அங்கீகாரம் தந்துள்ளார்கள். எனவே ஒருவர் உடும்புக்கறி சாப்பிடுவது கூடும் எனக் கூறும் போது நபியவர்கள் சாப்பிட்டதாகஒரு சான்றையாவது காட்ட முடியுமா? என்று கேட்பது அறியாமையாகும்.

சுபுஹுத் தொழுத பிறகு அதனுடைய முன் சுன்னத்தை நபியவர்கள் தொழுததில்லை. ஆனால்அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே முன் சுன்னத் தவறிவிட்டால் சுபுஹுக்குப் பின்அதைத் தொழலாம் என்று ஒருவர் கூறினால் நபியவர்கள் இவ்வாறு செய்ததாக ஒரு சான்றாவதுகாட்ட முடியுமா? என்று கேட்பதும் அறியாமையாகும். நபியவர்கள் செய்யாவிட்டாலும்எதற்கெல்லாம் அனுமதி கொடுத்துள்ளார்களோ அவையெல்லாம் மார்க்கம் தான். கூடாது என்றுகூறுபவர்கள் தான் அதற்குரிய தடையைக் காட்ட வேண்டும்.

இவர்களுக்காக சில மேலதிகமான சான்றுகளை எடுத்துக் காட்டுகின்றோம்.

ஸஹாபாக்கள் ஒரு காரியத்தைச் செய்யும் போது, அல்லது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில்நபித்தோழர்கள் ஒரு காரியத்தைச் செய்து அதை நபியவர்கள் தடை செய்யவில்லையென்றால்அதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்று தான் பொருளாகும். இதை அவர்களும் ஒத்துக்கொண்டுள்ளார்கள். இதை விளங்காமல் முறையாக ஆய்வு செய்யாமல் எடுத்தேன், கவிழ்த்தேன்என்ற ரீதியில் மறுப்பு எழுதியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுத ஸஹாபாக்களில் பெரும் பாலானவர்கள், அரைக்கால்வரை மறைக்கக் கூடிய அளவிற்குக் கூட அவர்களிடம் ஆடை இல்லை என்பதை நாம்ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது விளங்கிக் கொள்ள முடியும்

ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால், சிறுவர்களைப் போல் அவர்கள் தம்கீழாடைகளைப் பிடரிகள் மீது கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதுகொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால் “பெண்களே! ஆண்கள்(ஸஜ்தாவிலிருந்து) நிமிரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (சஜ்தாவிலிருந்து) உயர்த்தவேண்டாம்” என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: முஸ்லிம் 750

நபி (ஸல்) அவர்கள்: “பெண்களே! உங்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர்ஆண்கள் தங்கள் (தலைகளை) உயர்த்தும் வரை தன்னுடைய தலையை உயர்த்த வேண்டாம்” என்று கூறினார்கள். ஆண்களுடைய கீழாடை சிறியதாக இருந்ததால் அவர்கள் ஸஜ்தா செய்யும்போது அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டு விடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்

அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபீபக்ர்

நூல்: அஹ்மத் 25712

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களைநான் பார்த்திருக்கிறேன். அவர்களில் யாருக்குமே மேலாடை இருந்த தில்லை. அவர்களில்சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத்தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால் வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தமதுமறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காகத் தம் கைகளால் துணியைச் சேர்த்துப்பிடித்துக் கொள்வார்கள்.

நூல்: புகாரி 442

மேற்கண்ட ஹதீஸ்கள் நபித் தோழர்களில் பலர் தொழுகைகளில் தம்முடைய அரைக்கால் வரைகூட மறைக்காத கீழாடைகளை அணிந்து தொழுதுள்ளனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ளமுடிகிறது. இப்படிப் பட்ட ஆடைகளை அவர்கள் அணிந்து தொழும் போது தொடையின் சிலபகுதிகள் வெளியில் தெரியத் தான் செய்யும். ஆனால் நபியவர்கள் இதனைத் தடை செய்ததாகநாம் எந்தச் சான்றையும் காணவில்லை.

நபித்தோழர்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாகத் தான் இவ்வாறு செய்தார்கள் என்று கூறி இதைமழுப்பி விட முடியாது.

மேலாடை இல்லாத நேரத்தில் ஒருவர் மேலாடை இல்லாமல் தொழலாம். இது தான்நிர்ப்பந்தமாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மேலாடை இருக்கும் போது அது இல்லாமல்தொழுவதற்குத் தடை செய்துள்ளனர்.

ஆனால் தொடையைக் கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. எனவே ஆதாரம் இல்லாத பட்சத்தில் நிர்ப்பந்தம் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் ஒருநபித்தோழர் “ஒரு ஆடையில் தொழுவது கூடுமா?” என்று நபியவர்களிடம் வினவுகிறார். ஒருஆடை அணிந்து தொழும் போது உடலின் பலபகுதிகள் வெளியில் தெரியும். எனவே அந்தநபித்தோழர் இவ்வாறு வினவுகிறார். ஆனால் நபியவர்கள் அவருடைய கேள்விக்கு பதில்கூறாமல் “உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகளா இருக்கிறது?” என்று அவர்அவ்வாறு கேட்டதையே வெறுக்கும் படி பதில் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கேட்பதையே வெறுக்கிறார்கள் என்றால் அதில் நமக்குப் பல நன்மைகள் உள்ளது என்பதைநாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே நபித்தோழர்கள் அரைகுறை ஆடையுடன் தொழுததைநிர்ப்பந்தம் என்றும் கூற முடியாது. நபியவர்கள் அரை நிர்வாணமாகச் தொழச் சொன்னார்கள்என்று கூறி அதை விகாரமாக்குவதும் கூடாது. அவர்கள் ஒன்றிற்கு அனுமதியளிக்கும் போதுஅதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவன் தான் உண்மையான முஃமின் ஆவான்.

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாகஇருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:51)

எனவே நபி மொழிகளின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறும் போது அதை விகாரப்படுத்திக்கேலி செய்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேலி செய்வது போன்றதாகும். இதைத் தான் இன்றைக்கு உலக அமீர்களும், அவர்களின் புதுக் கூட்டாளிகளும் செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களின் தகிடு தத்தங்களை இவர்களை நம்புகின்ற ஒரு சிலகொள்கைவாதிகளும் விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.

தாங்கள் எதற்குப் பழக்கப்பட்டு விட்டார்களோ அதற்கு மாற்றமாக இறைத் தூதர்கள் கொண்டுவந்ததற்காகத் தான் அன்றைய மக்கள் இறைத்தூதர்களை எதிர்த்தனர். என்பதையும். மனோஇச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவன் வெற்றி பெறமுடியாது என்பதையும் இவர்கள்விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபித்தோழர்களின் கீழாடை மிகச் சிறியதாக இருந்ததால் சில நேரங்களில் அவசியம் மறைக்கவேண்டிய பகுதிகள் கூட தொழுகையில் வெளிப் பட்டுள்ளது.

அம்ர் பின் ஸலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் ஆறு அல்லது ஏழு வயதுடையவனாகஇருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தி யிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும் போது அது என்முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதிபெண்மணியொருவர் “உங்கள் ஒதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.

நூல்: புகாரி 4302

பின்புறம் தெரியும் வகையில் தான் அவர்களுடைய ஆடை இருந்துள்ளது. நிச்சயமாகஅதனுடைய நீளம் முட்டுக்கால் வரை கூட இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஆடையணிந்துதொழும் போது நிச்சயம் தொடையின் சில பகுதிகள் வெளிப்படத் தான் செய்யும் என்பதை நாம்தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நபியவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும், நபியவர்களின்காலத்தில் அதிகமான நபித்தோழர்கள் தொடைப் பகுதிகள் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்துதொழுகையில் கலந்துள்ளார்கள் என்ற சான்றுகளின் அடிப்படையிலும் ஆண்களின் தொடைப்பகுதி கட்டாயம் மறைக்கப்பட வேண்டிய உறுப்புகளில் உள்ளதல்ல என்றே நாம் கூறுகிறோம். எனவே ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில் தொழுதால் அதனைக் குறை கூறமுடியாதென்றும் நாம் கூறுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தொடை திறந்திருந்ததாக வரக் கூடிய செய்திகள்தொழுகையைக் குறிக்கவில்லை என இவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொடையைமறைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் வலுவான ஆதாரமாகக் காட்டக் கூடிய அந்தப்பலவீனமான ஹதீஸ்களிலும் கூட நபி (ஸல்) தொழுகையில் மறைக்க வேண்டும் என்றுகூறியதாக வரவில்லை. இதை வசதியாக மறைத்து விட்டனர். பலவீனமான ஹதீஸ்கள் என்றுதெளிவாகத் தெரிந்த பின்பும் அதனை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இவர்கள்தங்களின் பொய்யான வாதங்களை நிலை நாட்ட எப்படிப்பட்ட நிலைக்கும் செல்வார்கள்என்பதைத் தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

அவர்கள் காட்டும் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவன் தொப்புளிலிருந்துமுட்டுக்கால்கள் வரை மறைத்தவனாக மட்டும் தொழுதால் அது அரை நிர்வாணம் இல்லையா? இவ்வாறு யாராவது மக்கள் மத்தியில் நடமாடுவார்களா? இவ்வாறு மற்ற மனிதர்களின் முன்னேநிற்பதையே மானக்கேடானதாகக் கருதும் போது படைத்த அல்லாஹ்வின் முன் இப்படி நிற்பதைஅல்லாஹ் விரும்புவானா என்பதை ஒவ்வொரு அறிவுடையவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி முக்கால் நிர்வாணமாக பள்ளிவாசலுக்குள் செல்வது அலங்காரமாகும்? அலங்கோலமாகுமா? இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதைசெய்வதாக, அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதாகஆகாதா? என்றெல்லாம் நாமும் உங்களைப் போல் அந்த வசனங்களைக் காட்டி நீங்கள் கொடுத்தஅந்த ஆதாரமில்லாத ஃபத்வாவிற்கு பல கேள்விகளைக் கேட்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தங்களுடைய தொடையை வெளிப்படுத்தியிருக்கும்போது நிச்சயமாக அது கண்டிப்பாக மறைக்க வேண்டிய பகுதி இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இது தொழுகைக்கு பொருந்தாது என்று கூறும் ஆய்வாளர்கள் (?) தான்அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். அவர்களால் அப்படி காட்ட முடியாத பட்சத்தில் அவர்கள்தான் பொய்யர்கள் என்பதை அவரை உலக அமீராக(?) ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் இருக்கும் போது தனது தொடையை மூடாத நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் வரும் போது மூடியதாகவும், உஸ்மான் (ரலி) அதிகம்வெட்கப்படுவார்கள் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் நபி (ஸல்) அவர்கள் விளக்களித்தசெய்தியைக் குறிப்பிட்டிருந்தோம்.

இதற்கு மறுப்பளிக்க வந்தவர்கள், அபூபக்ரும் உமரும் ஆரம்ப கால நண்பர்கள் என்பதால்அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளனர். உஸ்மான்(ரலி) வந்ததும் மூடியுள்ளதால் இது தொடையை மறைக்க வேண்டும் என்பதைத் தான்காட்டுகின்றது என்ற அற்புதமான (?) ஆய்வை வெளியிட்டுள்ளனர்.

தொடை தெரிவது தடுக்கப்பட்டது என்றால் அதை யார் முன்னிலையிலும் நபி (ஸல்) அவர்கள்செய்திருக்க மாட்டார்கள். இவர்களது வாதப்படி தடுக்கப்பட்ட ஒரு காரியத்தை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று கூறப் போகின்றார்களா?

இதே ஆய்வின் (?) அடிப்படையில் “நெருங்கிய நண்பர்களுடன் இருக்கும் போது தடுக்கப்பட்டகாரியத்தைச் செய்து கொள்ளலாம்” என்று ஃபத்வா கொடுப்பார்களா?

மொத்தத்தில் ஏகத்துவத்தில் வெளியிடப்பட்ட முறையான ஆய்வுக் கட்டுரைக்கு அறியாமைவிளக்கத்தைக் கொடுத்தவர்கள் பின்வரும் கேள்விகளுக்குப் பதில் கூறக் கடமைப் பட்டுள்ளனர். இதில் ஒன்றிற்கு அவர்கள் பதிலளிக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுடைய ஆய்வில்குறை உள்ளது என்று தான் பொருளாகும்.

1. ஒருவர் முதலில் ஒரு செய்தியைக் கூறுகிறார். பின்னர் அது அவருக்கு பலவீனம் எனத்தெரிகிறது. எனவே அவர் அதை வெளிப்படையாக மக்களிடம் கூறுகிறார். இது சரியானநடைமுறையா? இறையச்சத்திற்கு நெருக்கமானதா? இல்லை தவறான நடைமுறையா? என்பதை இவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

2. ஒருவர், தான் முதலில் கூறிய ஹதீஸ் பலவீனமானது என்பதை ஆதாரங்களுடன்தெளிவுபடுத்தும் போது அவர் மூளை குழம்பி விட்டாரா? அல்லது எவ்விதச் சான்றும் காட்டாமல்அவருடைய ஆய்வை மறுப்பவர்கள் மூளை குழம்பியவர்களா?

3. ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகும் எவ்வித சான்றும்காட்டாமல் அதே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள். எனவே பலவீனமானஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற கொள்கைக்கு எப்போது மாறினீர்கள்? ஏன் இந்தநிலைப்பாட்டிற்கு வந்தீர்கள்?

4. தொப்புளிலிருந்து முட்டுக்கால் வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று பலவீனமானஹதீஸ்களிலிருந்து நீங்கள் ஆதாரம் எடுத்துள்ளீர்கள். அதில் தொழுகையில் மறைக்க வேண்டும்என்று வந்துள்ளதா?

5. ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவது அரை நிர்வாணம் என்றால்நீங்கள் ஏற்றுக் கொண்ட முறைப்படி தொப்புளிலிருந்து மூட்டுக்கால் வரை மறைத்து தொழுவதுஅரை நிர்வாணம் இல்லையா? ஏனென்றால் இரண்டிற்கும் ஒரு ஜான் தான் வித்தியாசம்

6. ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவதால் அதைக் குறை கூற முடியாதுஎன்று கூறுவது அனைவரும் அரைக்கால் டவுசருடன் தொழுகைக்கு வாருங்கள் என்றுஅழைப்பதா? அப்படியென்றால் நீங்கள் “தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைக்கவேண்டும்” என்று கூறுவதற்கும் இவ்வாறு கூறலாமா?

7. நபியவர்கள் தொழுகையல்லாத நிலைகளில் தொடை தெரியும் வண்ணம்ஆடையணிந்துள்ளனர். இது தொழுகைக்குப் பொருந்தாது என்று கூறக்கூடிய நீங்கள் அவ்வாறுதடை செய்ததற்கு நேரடிச் சான்றைக் காட்ட முடியுமா?

8. நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்று இருந்தால் தான் ஒரு காரியம் மார்க்கச் சட்டமாகுமா? அல்லது நபித்தோழர்கள் செய்ததை நபியவர்கள் அங்கீகரித்திருந்தால் அதை மார்க்கச் சட்டமாகஎடுத்துக் கொள்ளக் கூடாதா? கூடும் என்றால் “நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்றைக் காட்டமுடியுமா?” என்று கேட்டதின் மர்மம் என்ன?

ஆக இவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்பதையெல்லாம் விட்டு விலகி, ஒரு தனி நபரை எதிர்க்கவேண்டும்; அவர் என்ன சொன்னாலும், அது குர்ஆன், ஹதீஸிற்கு உட்பட்டு இருந்தாலும் அதைவிமர்சிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்று விட்டார்கள்.

நபித் தோழர்களை இழிவு படுத்தும் ஜாக்கினர் இவர்களின் இந்தத் தனி நபர் எதிர்ப்பு எந்த அளவுக்கு வரம்பு மீறிச் சென்று விட்டது என்பதற்கு ஓர்உதாரணத்தைக் கூறலாம். அரைக் கால் டவுசர் அணிந்து நபித் தோழர்கள் தொழுததாக இறுதியாக ஒரு செய்தியை நாம்வெளியிட்டோம். (புகாரி 365) நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பான ஐந்து ஹதீஸ்கள் மூலம் ஒரு உண்மையை உறுதி செய்தபின்னர் மேலதிக தகவலுக்காகத் தான் நபித்தோழர்களும் அவ்வாறு ஆடை அணிந்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தோம். இதையும் இவர்கள் விமர்சித்து எழுதியுள்ளார்கள். நம்மை விமர்சித்தது மட்டுமல்ல; நமக்குமறுப்பு என்ற பெயரில் நபித் தோழர்களையும் தரக் குறைவாக விமர்சித்துள்ளார்கள். குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கூறி வந்தவர்கள், நபித் தோழர்களையும்பின்பற்ற வேண்டும் என்று தீர்மானம் போட்டது நினைவிருக்கலாம். நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர் களுடைய ஈமானை விடச்சிறந்ததாகும். நபித்தோழர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர். நபித்தோழர்களை சங்கைப் படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்லிம்கள் மீதுகடமையாகும். ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில்கொள்வது அவசியமாகும். ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும்நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும். ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால்வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும். குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை. என்றெல்லாம் தீர்மானம் போட்டவர்கள் இன்று நாம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் நபித்தோழர்களின் காலத்தில் நடந்த ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டும் போது, தயவு தாட்சண்யமின்றிஅதை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். குர்ஆன், சுன்னாவிற்கு நபித் தோழர்கள் கொடுக்கும் விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால்வந்தவர்கள் கொடுக்கும் விளக்கங்களை விடச் சிறந்தது என்று கூறியவர்கள், இன்று நபித்தோழர்கள் கொடுத்த விளக்கத்தை நாம் எடுத்துக் காட்டும் போது, டவுசர்காரர்கள் என்று கிண்டல்செய்கின்றார்கள். நாமாவது குறைந்தபட்ச ஆடை என்ற சட்டத்தை மட்டுமே மக்களுக்கு எடுத்துச் சொன்னோம். ஆனால் நபித் தோழர்கள் அந்த ஆடையை அணிந்து தொழுதே இருக்கின்றார்கள். அப்படியானால் இவர்கள் அந்த நபித் தோழர்களை டவுசர்காரர்கள் என்று கிண்டல்செய்கின்றார்கள் என்று தானே அர்த்தம். நம்மைக் குறை சொல்வதாக எண்ணிக் கொண்டு, அல்லாஹ்வின் முன்னிலையில் நபித்தோழர்கள் அரை நிர்வாணமாகத் தொழுதார்கள் என்று குற்றம் சாட்டுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள், “நபித் தோழர்களை மதிக்க வேண்டும், அவர்கள் கொடுக்கும் விளக்கத்தைத்தான் ஏற்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டது யாரை ஏமாற்றுவதற்காக, யாருடையதிருப்தியைப் பெறுவதற்காக என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு தனி நபரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, கண்ணியமிகு ஸஹாபாக்களையேடவுசர்காரர்கள், அரை நிர்வாணிகள் என்று கிண்டல் செய்யும் இவர்களை மக்கள் அடையாளம்கண்டு கொள்ள வேண்டும். இவர்களது இந்தக் கொள்கைத் தடுமாற்றம் முற்றிப் போய், நமக்கு மறுப்பு சொல்வதற்காக சமாதிவழிபாடு கூடும் என்றோ, இறந்தவர்களிடம் பிரார்த்திக்கலாம் என்றோ சொல்லி விடாமல் இருக்கஎல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக!